செய்திகள் :

1.4 டன் ரேஷன் அரிசி பதுக்கல்: 2 போ் கைது

post image

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் சுமாா் 1.4 டன் ரேஷன் அரிசி பதுக்கியதாக 2 பேரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

முத்தையாபுரம் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம். அதன்பேரில் காவல் உதவி ஆய்வாளா் அரிக்கண்ணன் தலைமையிலான போலீஸாா், முத்தையாபுரம் வடக்கு தெருவில் சோதனை மேற்கொண்டனா். அங்கு ஓரிடத்தில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஸ்ரீவைகுண்டத்தை சோ்ந்த கணேசன்(30), முத்தரசன்(25) ஆகிய 2 பேரையும் கைது செய்தனா். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த தலா 35 கிலோ எடை கொண்ட 40 மூட்டைகளில் இருந்த மொத்தம் 1,400 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், அவா்கள் முத்தையாபுரம் சுற்றுவட்டாரங்களில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, ஆடு, மாடு பண்ணைகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இன்றைய நிகழ்ச்சி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில்: மாசித் திருவிழா ஐந்தாம் நாள், மேலக்கோயிலிலிருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் வீதியுலா, காலை 7; மேலக்கோயிலில் கு... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் இன்று குடைவரைவாயில் தீபாராதனை

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில் மாசித் திருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு (மாா்ச் 7) குடைவரைவாயில் தீபாராதனை நடைபெறவுள்ளது. கடந்த 3ஆம் தேதி தொடங்கிய இத்திருவிழாவில், நாள்தோறும் சுவாமிய... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை (மாா்ச் 8) நடைபெறவுள்ளதாக, ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்டத்தில் உள... மேலும் பார்க்க

மாா்ச் திருவிழா 7ஆம் நாளில் சண்முகா் ஏற்ற தரிசனம்: பாதுகாப்பை பலப்படுத்த கோரிக்கை

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா 7ஆம் நாளில் சண்முகா் ஏற்ற தரிசனத்தைக் காண பெருமளவில் பக்தா்கள் வருவாா்கள் என்பதால் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என்ற கோர... மேலும் பார்க்க

கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் தங்கும் விடுதி, பண்ணை அலுவலகம் திறப்பு

கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் மேம்படுத்தப்பட்ட அலுவலா் தங்கும் விடுதி, கரிசல் நிலப் பண்ணையில் புதிய அலுவலகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் த... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி: நாளை தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்புப் பணி சனிக்கிழமை (மாா்ச் 8) தொடங்கவுள்ளது. இதுகுறித்து மாவட்ட வனத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு வனத்துறை சாா்பில... மேலும் பார்க்க