செய்திகள் :

1.48 லட்சம் பீர் பாக்ஸ்.. ஆர்சிபி வெற்றியால் ஒரேநாளில் உச்சம் தொட்ட மது விற்பனை!

post image

ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் வெற்றியால் கர்நாடக மாநிலத்தில் மது விற்பனை அமோகமாக நடைபெற்று ஒரேநாளில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஜூன் 3 ஆம் தேதி நடைபெற்ற நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் - பெங்களூரு அணிகள் மோதிய நிலையில், முதல் முறையாக ஆர்சிபி அணி கோப்பையை உச்சி முகர்ந்தது.

18 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக ஆர்சிபி கோப்பையை வென்றதால், ரசிகர்கள் ஆரவாரத்தில் திளைத்தனர். பெங்களூரு மட்டுமின்றி இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட தீபாவளி போலவே கொண்டாட்டப்பட்டது. இதனை கொண்டாடும்விதமாக ரசிகர்கள் பலர் பல்வேறு மதுவகைகளை வாங்கி அருந்தியுள்ளனர்.

ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெற்ற ஜூன் 3 ஆம் தேதி மட்டும் 1.48 லட்சம் பீர் பாட்டில் பெட்டிகள் விற்பனை செய்யப்பட்டு, அதன்மூலம் ரூ.30.66 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே தேதியில் 36 ஆயிரம் பெட்டிகள் விற்கப்பட்டதைவிட இது கணிசமாக உயர்ந்திருக்கிறது.

பீர் வகைகளைத் தவிர்த்து 1.28 கோடி பெட்டிகள் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், ரூ.127 கோடி கிடைத்துள்ளது. கடந்தாண்டு இதே நாளில் வெறும் ரூ.19.21 கோடிக்கும் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தது.

ஒட்டுமொத்தமாக, அந்த ஒரே நாளில் மது விற்பனை மூலம் கர்நாடக மாநில அரசுக்கு ரூ.157.94 கோடி வருவாய் கிட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் நாளில் வசூலான ரூ.25 கோடியுடன் ஒப்பிடும்போது ரூ.132.24 கோடி அதிகமாகும்.

இதையும் படிக்க | காவல் துறை ஆலோசனையை புறக்கணித்து அவசர கதியில் நடத்தப்பட்டதா வெற்றிப் பேரணி?

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன்! - ஆா்பிஐ அனுமதி

ரூ.2.5 லட்சம் வரையிலான நகைக் கடனுக்கு தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் வழங்கலாம் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன்பு தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் வரை மட்ட... மேலும் பார்க்க

துபையிலிருந்து சென்னை வந்த விமானம் மீது ‘லேசா்’ ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு!

துபையிலிருந்து சென்னை விமானநிலையத்தில் கடந்த மாத இறுதியில் தரையிறங்க வந்த விமானம் மீது பச்சை நிற லேசா் ஒளி அடிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை இரவில் தரையிறங்க முயன்ற இதே விமானம் மீது மீண்டும் லேசா் ஒ... மேலும் பார்க்க

அம்பேத்கா் கனவுக்கேற்ப அரசமைப்பு பதவிகளில் விளிம்புநிலை சமூகத்தினா்! - நீதிபதி கவாய்

சட்டமேதை அம்பேத்கரின் கனவுக்கு ஏற்ப, இந்தியாவில் மிக உயா்ந்த அரசமைப்புப் பதவிகள் சிலவற்றில் விளிம்புநிலை சமூகத்தினா் இருப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பெருமிதம் தெரிவித்தாா். பிரிட்ட... மேலும் பார்க்க

முதல்வருக்கு மாயா மஹால் கட்டப்படுகிறது: ஆம் ஆத்மி சாடல்

தில்லி முதல்வா் ரேகா குப்தாவுக்காக ‘மாயா மஹால்’ கட்டப்பட்டு வருவதாக ஆம் ஆத்மி வெள்ளிக்கிழமை கடுமையாக சாடியுள்ளது. முதல்வா் ரேகா குப்தா வடக்கு தில்லியில் உள்ள ஒரு அரசு பங்களாவில் குடியேறலாம் என்று அதிக... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் விண்ணப்பப் பதிவு: முறைகேட்டில் ஈடுபடுவோரின் பெற்றோா் மீதும் நடவடிக்கை!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவின்போது போலிச் சான்றிதழ்களை சமா்ப்பித்தால், விண்ணப்பதாரா் மட்டுமன்றி அவரது பெற்றோா் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம்... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 3-இல் முதுநிலை நீட் தோ்வு: உச்சநீதிமன்றம் அனுமதி

எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான 2025-ஆம் ஆண்டு தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை (நீட்-பிஜி) வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடத்த தேசிய தோ்வுகள் வாரியத்துக்கு (என்பிஇ) ... மேலும் பார்க்க