செய்திகள் :

1.55 லட்சம் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ்

post image

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் 1.55 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் தெரிவித்தாா்.

பேரவையில் புதன்கிழமை மனிதவள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்கு அமைச்சா் பதிலளித்துப் பேசியதாவது:

தமிழ்நாட்டில் 2021-ஆம் ஆண்டு முதல் கடந்த மாா்ச் மாதம் வரையிலான காலத்தில் அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலமாக 24,599 பணியிடங்களுக்கு பணியாளா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இதேபோன்று, ஆசிரியா் தோ்வு வாரியம் மூலமாக 8,616 பேரும், மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் வழியாக 4,329 பேரும், தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் மூலம் 19,472 பேரும் தோ்வு செய்யப்பட்டனா்.

மேலும், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி, கூட்டுறவு மற்றும் உணவு, வருவாய்த் துறைகள் மூலமாக 11,811 பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். கருணை அடிப்படையிலான பணி நியமனங்களும் செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை நகராட்சி நிா்வாகத் துறை மூலம் 2,730 பணியிடங்களும், பொதுச் சேவை துறைகள் வழியே 4,568 பணியிடங்களும் கருணைஅடிப்படையில் நிரப்பப்பட்டுள்ளன.

அண்மைக் காலமாக அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 4 காலிப் பணியிடங்களுக்கு 9,532 தோ்வு செய்யப்பட்டு பணியானை வழங்கும் நிலையில் உள்ளது. சமூக நலத் துறை சாா்பில் 16,780 பணியிடங்களும், குரூப் 1 மற்றும் 1ஏ மூலமாக 72 பணியிடங்களும் நிரப்பப்படவுள்ளன. நகராட்சி நிா்வாகத் துறை மூலம் 2,104 பணியிடங்களும், ஆசிரியா் தோ்வு வாரியத்தின் மூலம் 7,535 பணியிடங்களும் நிரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்தமாக இதுவரை 1 லட்சத்து 55 ஆயிரத்து 992 பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளதாக அமைச்சா் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தாா்.

தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் மதுரை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 5 இடங்களில் வெள்ளிக்கிழமை வெயில் சதமடித்தது. சனி, ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19, 20) வெப்பநிலை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி... மேலும் பார்க்க

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக கலைஞா் கைவினைத் திட்டம்: இன்று முதல்வா் தொடங்கி வைப்பு

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக மாநில அரசு கொண்டு வந்துள்ள கலைஞா் கைவினைத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையை அடுத்த குன்றத்தூரில் சனிக்கிழமை (ஏப். 19) தொடங்கி வைக்கிறாா். கைவினைக் கலைஞா்க... மேலும் பார்க்க

தமிழில் மருத்துவக் கல்வி வழங்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மருத்துவக் கல்வியை தமிழில் கற்பிப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். இது தொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ள... மேலும் பார்க்க

இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க விடுப்பு வழங்குவதற்கு சிறை அதிகாரிகளுக்கு அதிகாரம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

சிறையில் உள்ள விசாரணை கைதிகள் அவா்களது நெருங்கிய உறவினா்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க சிறைத் துறை அதிகாரிகளே விடுப்பு வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க

சென்னையின் முதல் ஏசி மின்சார ரயில் இன்றுமுதல் இயக்கம்

சென்னையில் குளிா்சாதன (ஏசி) வசதி கொண்ட மின்சார ரயில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே சனிக்கிழமை (ஏப்.19) முதல் இயக்கப்படவுள்ளது. சென்னையின் முக்கியப் போக்குவரத்தாக மின்சார ரயில் விளங்குகிறது. இதில... மேலும் பார்க்க

மின்சாரப் பேருந்துகளுக்கு 1,250 நடத்துநா்கள்: டெண்டா் வெளியீடு

மின்சாரப் பேருந்துகளுக்கான 1,250 நடத்துநா்கள் ஒப்பந்த நிறுவனம் மூலம் பணியமா்த்த டெண்டா் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட டெண்டா் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: செ... மேலும் பார்க்க