செய்திகள் :

10ஆம் வகுப்பு தேர்வு முடிவு: விழுப்புரத்தில் 95.09 % தேர்ச்சி

post image

விழுப்புரம்: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் விழுப்புரம் மாவட்டம் 95.09% தேர்ச்சியுடன் 15-ஆவது இடத்தைப் பிடித்தது.

இந்த மாவட்டத்தில் மொத்தமுள்ள 362 பள்ளிகளைச் சேர்ந்த 12, 104 மாணவர்கள், 11,612 மாணவிகள் என மொத்தமாக 23,716 பேர் தேர்வெழுதினர்.

இதில் 11,394 மாணவர்கள், 11,158 மாணவிகள் என மொத்தமாக 22, 552 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 94.13 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 96.09 சதவீதமாகவும் உள்ளது.

மாவட்டத்தில் 192 பள்ளிகள் நூறு சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளன.

கடந்தாண்டு 94.11 சதவீத தேர்ச்சியுடன் 10- ஆவது இடத்திலிருந்த விழுப்புரம் மாவட்டம் நிகழாண்டில் 0.98 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றிருந்தாலும், 95.09% தேர்ச்சியுடன் தரவரிசையில் 15-ஆவது இடத்துக்கு பின் தங்கியது

விழுப்புரம் மாவட்டத்தில் 241 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 16, 189 பேர் தேர்வெழுதிய நிலையில், 15,242 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது 94.15 சதவீதத் தேர்ச்சியாகும் கடந்தாண்டு 93.51% பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், நிகழாண்டில் 0.64 % கூடுதலாக தேர்ச்சி பெற்ற போதிலும் மாநில அளவில் 10- ஆவது இடத்துக்கு பின் தங்கியது. 110 அரசுப் பள்ளிகள் நூறு சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளன.

இதையும் படிக்க | 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: முழு விவரம்!

தமிழகத்தில் அநேக இடங்களில் இரவு 10 மணி வரை பலத்த மழைக்கு வாய்ப்பு!

சென்னை: தமிழகத்தில் 32 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர்காஞ்சிபுரம்விழுப்புரம்கடலூர்திருச்சிஅரியலூர்பெரம்பலூர்தஞ... மேலும் பார்க்க

மே 29, 30-ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

சென்னையில் மே 29, 30-ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இ... மேலும் பார்க்க

மதுரையில் மழை! தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்கிறது?

கோடை வெய்யில் கொளுத்திவந்த நிலையில், இன்று பிற்பகலில் மதுரையில் பரவலாக மழை பெய்துள்ளது. மேலும் பார்க்க

ஊட்டத்தூர் கோயிலில் முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டு கண்டெடுப்பு!

ஊட்டத்தூர் சுத்தரத்தனேசுவர் கோயிலில் முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் ஊட்டத்தூர் சுத்தரத்தனேசுவர் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை சுற்றுலா, பண்பாடு மற்... மேலும் பார்க்க

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை!

தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூ... மேலும் பார்க்க

10ஆம் வகுப்பில் ஒரே மதிப்பெண் எடுத்த இரட்டைச் சகோதரிகள்!

கோவை : கூலித் தொழிலாளியின் இரட்டை மகள்கள் ஒரே மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். அருமையான வெற்றி என கொண்டாடி மகிழ்கிறார்கள் பெற்றோரும் உறவினர்களும்.கோவை மாவட்டம், ராமநாதபுரத்தைச் சேர்ந்த கூலி வேலை ... மேலும் பார்க்க