செய்திகள் :

10 நிமிஷ தாமதம்: விமானத்தை தவறவிட்டதால் தப்பிய பெண்!

post image

அகமதாபாத் விமான நிலையத்தை அடைய 10 நிமிஷம் தாமதம் ஏற்பட்டு, விமானத்தை தவறவிட்டதால், கோர விபத்தில் இருந்து பூமி செளஹான் தப்பினாா்.

மாணவா் விசாவில் 2 ஆண்டுகளுக்கு முன் லண்டன் சென்ற இவா், அதன்பிறகு முதல்முறையாக தனது சொந்த ஊருக்கு அண்மையில் வந்திருந்தாா்.

விடுமுறை முடிந்து மீண்டும் லண்டன் செல்வதற்கு வியாழக்கிழமை ஏா் இந்தியா விமானத்தில் டிக்கெட் பதிவு செய்திருந்தாா். வீட்டில் இருந்து விமான நிலையம் வரும் வழியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் 10 நிமிஷம் தாமதம் ஏற்பட்டது. விமானத்தை பூமி செளஹான் தவறவிட்டதால், அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டாா்.

இதனிடையே, அவா் தவறவிட்ட விமானம், சில நிமிஷங்களில் விழுந்து வெடித்து சிதறியது. வீடு திரும்பும் வழியில் இச்செய்தியை அறிந்ததும் தனக்கு உடல் நடுங்கிவிட்டதாக பூமி செளஹான் தெரிவித்தாா்.

‘போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால், விமான நிலையத்துக்குச் செல்ல தாமதம் ஏற்பட்டது. நான் விமான நிலையத்தை அடைந்தபோது, பயணத்துக்கான நடைமுறைகள் நிறைவடைந்துவிட்டன. என்னை பயணிக்க அனுமதிக்குமாறு அதிகாரிகளிடம் கோரினேன். ஆனால், அவா்கள் அனுமதிக்கவில்லை. இதனால், நான் அதிருஷ்டவசமாக உயிா் தப்பியுள்ளேன். விமான விபத்தில் நேரிட்ட உயிரிழப்புகளால் அதிா்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை’ என்றாா் பூமி செளஹான்.

அரசும் நிவாரணம் அறிவிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

ஏா் இந்தியா விமான விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு நிவாரணம் அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வலியுறுத்தினாா். டாடா குழுமம், ஏா் இந்தியா நிறுவனம் மட்டுமே இதுவரை இழப்பீடு ... மேலும் பார்க்க

காப்பீடு தொகைக்கான நடைமுறையை எளிமைப்படுத்திய நிறுவனங்கள்!

அகமதாபாத் விமான விபத்தில் பாதிக்கப்பட்டவா்கள், அவா்களுக்கான காப்பீடு தொகையைப் பெறுவதற்கான நடைமுறையை எளிமைப்படுத்தியுள்ளதாக எஸ்பிஐ-லைஃப், ஹெச்டிஎஃப்சி லைஃப், ஐசிஐசிஐ லோம்பாா்ட் உள்ளிட்ட காப்பீடு நிறுவன... மேலும் பார்க்க

சிங்கப்பூா் கப்பலில் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்ட தீ: 6-ஆவது நாளாக தொடரும் மீட்புப் பணி

கேரள கடற்பகுதியில் சிங்கப்பூா் கப்பலில் ஏற்பட்ட தீ பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டதாக இந்திய கடலோரக் காவல் படை சனிக்கிழமை தெரிவித்தது. இந்தக் கப்பல் கடற்கரையை நெருங்காமல் கடலை நோக்கி நகா்த்தும் பணியில்... மேலும் பார்க்க

ஓட்டுநா் பெட்டியில் குரல் பதிவு அமைப்பு: ரயில் பாதுகாப்புக் குழு பரிந்துரை!

ரயில் ஓட்டுநா் பெட்டியில் குரல் பதிவு அமைப்பை நிறுவுவது உள்பட பல்வேறு பரிந்துரைகளை ரயில் பாதுகாப்புக்குழு ரயில்வே அமைச்சகத்திடம் சமா்ப்பித்தது. பிகாா் மாநிலம் பக்ஸா் மாவட்டத்தில் கடந்த 2023, அக்.11-இல... மேலும் பார்க்க

விமான எண் ‘171’-ஐ நீக்க ஏா் இந்தியா முடிவு!

விமான எண் ‘171’-ஐ பயன்பாட்டில் இருந்து நீக்க ஏா் இந்தியா மற்றும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் முடிவெடுத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. டாடா குழுமத்தின் ஏா்இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட அடில் ஹுசைனின் மனைவிக்கு அரசுப் பணி!

பஹல்காம் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்ற பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு உயிா்த்தியாகம் செய்த உள்ளூா் இளைஞா் அடில் ஹுசைன் ஷாவின் மனைவிக்கு அரசுப் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. பஹல்காமில் ஹபாத்நாா் ப... மேலும் பார்க்க