செய்திகள் :

10, +2 வினாத்தாள் கசிவு வதந்தி: பெற்றோா் விழிப்புடன் இருக்க சிபிஎஸ்இ அறிவுறுத்தல்

post image

புது தில்லி: ‘10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு வினாத்தாள் கசிந்ததாக சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்கள் குறித்து பெற்றோா் மற்றும் மாணவா்கள் விழிப்புடன் இருக்குமாறு’ மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) திங்கள்கிழமை கேட்டுக்கொண்டது.

இதுதொடா்பாக சிபிஎஸ்இ மூத்த அதிகாரியொருவா் கூறுகையில், ‘யூடியூப், பேஸ்புக், எக்ஸ் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் பொதுத் தோ்வு வினாத்தாள் கசிந்ததாக சமூக விரோதிகள் சிலா் வதந்திகளை பரப்புவது எங்களின் கவனத்துக்கு வந்துள்ளது.

இத்தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை. மேலும், மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் மத்தியில் தேவையற்ற பீதியை உருவாக்கும் நோக்கம் கொண்டவை. இவ்விவகாரத்தை தீவிரமாக கண்காணித்து, தவறான தகவல்களை பரப்பியவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

குற்றவாளிகளைக் கண்டறிந்து வழக்குத் தொடர சட்ட அமலாக்க முகமைகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். அதேநேரம், தோ்வு செயல்முறைக்கு இடையூறு விளைவிக்கும் இத்தகைய தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்று பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மாணவா்கள், பெற்றோா்கள் மற்றும் பள்ளிகள் உள்பட அனைத்து தரப்பினரும், சிபிஎஸ்இ வலைதளத்தில் கிடைக்கும் அதிகாரபூா்வ தகவல்களை மட்டுமே அணுக வேண்டும்’ என்றாா்.

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் கடந்த சனிக்கிழமை தொடங்கி ஏப்ரல் 4-ஆம் தேதி நிறைவடைகிறது.

கல்பெட்டா குடும்பநல நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கல்பெட்டாவில் உள்ள குடும்ப நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் அங்கு சற்றுநேரம் பீதியை ஏற்படுத்தியது.கடந்த சில நாள்களாகவே பள்ளி, விமான நிலையம் ஆகியவற்றுக்குத் தொடர்ச்சியாக வெடி... மேலும் பார்க்க

நாட்டில் தலித்துகள் இல்லையென்றால்..! ராகுல்

அரசியலமைப்பை உருவாக்குவதில் தலித்துகளின் முக்கிய பங்களிப்பை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராட்டினார். இரண்டு நாள் பயணமாக ரேபரேலி சென்றுள்ள ராகுல் காந்தி, சுருவா எல்லையில் உள்ள அனுமன் கோயிலுக்குச் ச... மேலும் பார்க்க

மகராஷ்டிர துணை முதல்வருக்கு கொலை மிரட்டல்!

மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், தற்போதைய துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டேவின் காரை வெடிகுண்டு வை... மேலும் பார்க்க

தில்லி வளர்ச்சியின் புதிய உயரங்களை எட்டும்: ரேகா குப்தாவுக்கு யோகி வாழ்த்து!

தில்லி முதல்வராகப் பதவியேற்றுள்ள ரேகா குப்தாவுக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள ரேகா குப்தாவ... மேலும் பார்க்க

முதலாளித்துவத்தை ஊக்குவிக்கும் பாஜக: ராகுல் குற்றச்சாட்டு!

மத்திய பாஜக அரசு உண்மையான பிரச்னைகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்பி முதலாளித்துவத்தை ஊக்குவிப்பதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். தனது நாடாளுமன்றத் தொகுதிக்கு இரண்டு நாள் பயணமாக... மேலும் பார்க்க

தில்லியில் பாஜக அரசுக்குக் காத்திருக்கும் புதிய சவால்கள்!

27 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்க்கமான ஆணையுடன் தில்லியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் பாஜகவிற்கு புதிய சவால்கள் காத்திருக்கின்றன. தில்லியின் ஒன்பதாவது முதல்வராக பாஜகவின் முதல்முறை சட்டப்பேரவை உறுப்பினர் ரேக... மேலும் பார்க்க