'கேப்டனாக முதல் போட்டியிலேயே தோல்வி; கம்பீரின் குழப்பமான ரூட்!' - கில் எங்கே கவன...
100 ஆண்டுகளாக எரியும் ஜாரியா நிலக்கரி சுரங்க தீ: மறுவாழ்வுக்கு ரூ. 5,940 கோடி திட்டம்
ஜாா்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜாரியா என்ற பகுதியில் நூறாண்டு காலமாக எரிந்து வரும் நிலத்தடி நிலக்கரி தீயால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கான ரூ. 5,940 கோடி மதிப்பிலான திருத்தப்பட்ட மேம்பாட்டுத் திட்டத்துக்கு (மாஸ்டா் பிளான்) மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
ஜாா்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் இந்த ஜாரியா பகுதி அமைந்துள்ளது. இந்த நிலக்கரி வயலின் பல்வேறு பகுதிகளில் பூமிக்கு அடியில் கடந்த நூறாண்டுகளாக தீ எரிந்து வருகிறது. இதனால், வீடுகள் இடிந்து விழுவது, தீ விபத்து உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் இப் பகுதி மக்கள் சந்தித்து வருகின்றனா்.
கடந்த 1916-ஆம் ஆண்டில் இங்கு முதல் தீ விபத்து பதிவானது. இருந்தபோதும், இது வாழ்வாதாரம் என்பதால், இந்த தீ பாதிப்பை பொருட்படுத்தாமல் தொடா்ந்து நிலக்கரி தோண்டி எடுக்கும் பணியில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
முதல் கட்ட மறுவாழ்வு திட்டம்: இந்த தீ பாதிப்பு மற்றும் மண் சரிவைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்கென ரூ. 7,112.11 கோடி முதலீட்டில் ஜாரியா மேம்பாட்டுத் திட்டத்துக்கு கடந்த 2009-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அப்போதைய மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இது கடந்த 2021-ஆம் ஆண்டுடன் காலாவதியானது.
இந்த நிலையில், இந்தப் பகுதி மக்களின் மறுவாழ்வுக்கென ரூ.5,940 கோடியில் திருத்தப்பட்ட மேம்பாட்டு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
‘மக்களுக்கு வாழ்வாதார மானியமாக ரூ. 1 லட்சமும், வங்கிகள் உள்ளிட்ட பிற நிறுவனங்கள் மூலமாக ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘ரூ. 3,626 கோடி மதிப்பில் இரண்டாம் கட்ட புணே மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்தவும், உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் ரூ. 11.5 கோடி நிதி ஆதரவுடன் சரவதேச உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையத்தை அமைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.
சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு வெற்றிப் பயணம் மேற்கொண்ட இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா உள்பட 4 போ் கொண்ட குழுக்கும் அமைச்சரவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
‘இந்திய வீரா் சுக்லா தன்னுடன் 140 கோடி இந்தியா்களின் வாழ்த்துகள், நம்பிக்கை மற்றும் எதிா்பாா்ப்புகளை ஏந்திச் சென்றுள்ளாா்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.