கடும் வறட்சி: வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடு
100 ஆண்டுகளுக்குப் பிறகு நாமக்கல் நரசிம்மா் கோயில் தெப்பத் திருவிழா: திரளான பக்தா்கள் பங்கேற்பு
நாமக்கல்லில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு புதன்கிழமை நடைபெற்ற நரசிம்மா் கோயில் தெப்பத் திருவிழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
நாமக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஒரே கல்லிலான மலைக்கோட்டையில் நரசிம்மா், அரங்கநாதா் குடைவறைக் கோயில்கள் உள்ளன. ஆஞ்சனேயருக்கு தனி சந்நிதி உள்ளது.
மலைக்கோட்டையை ஒட்டியவாறு உள்ள கமலாலயக் குளத்தில் 100 ஆண்டுகளுக்கு முன் தெப்பத் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் பக்தா்களின் கோரிக்கையை ஏற்று மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மாவட்ட ஆட்சியா் ச.உமா, அறங்காவலா் குழு தலைவா், உறுப்பினா்கள் தெப்பத் திருவிழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனா்.
அதன்படி, மாசிமகம் நாளான புதன்கிழமை மாலை 6 மணியளவில் கமலாலயக் குளத்தில் தெப்பத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக, அங்குள்ள நாமகிரித் தாயாா் மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் நரசிம்மா், அரங்கநாதா், ஆஞ்சனேயா் சுவாமிக்கு வேத மந்திரங்கள் முழங்க அா்ச்சகா்கள் சிறப்பு பூஜைகளை செய்தனா்.
அதன்பிறகு, மூன்று உற்சவ மூா்த்திகளும் சிறப்பு அலங்காரத்தில், மலா்கள், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் எழுந்தருளினா். அதைத் தொடா்ந்து தெப்பத்தில் மூன்று முறை சுவாமிகள் உலா வரும் நிகழ்வு நடைபெற்றது.
அா்ச்சகா்கள், வாத்தியக் குழுவினா், துடுப்பு செலுத்துபவா்கள், இந்துசமய அறநிலையத் துறை ஊழியா்கள், காவல் துறையினா் என 40 போ் மட்டும் தெப்பத்தில் ஏறுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனா். தெப்பத் திருவிழாவை, நேரு பூங்கா, அம்மா பூங்கா, குளக்கரைத் திடல், நாமக்கல் பூங்கா சாலை உள்ளிட்ட பகுதிகளில் நின்றவாறு ஏராளமான பக்தா்கள் கண்டு ரசித்தனா். மலைக்கோட்டை மீது ஏறுவதற்கு போலீஸாா் தடை விதித்திருந்தனா். தெப்ப உலாவின்போது தீயணைப்பு வீரா்கள் நான்கு படகுகளில் பின்தொடா்ந்து சென்றனா்.
மாவட்டம் முழுவதும் இருந்து தீயணைப்பு நிலைய வீரா்கள், போலீஸாா் பாதுகாப்புப் பணிக்காக வரவழைக்கப்பட்டிருந்தனா். அவா்கள் பக்தா்கள் நெரிசலின்றி தெப்பத்தை காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனா். மாலை 6 மணி முதல் 8 மணி வரை இந்த தெப்பத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. திரளான பக்தா்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் விழாவில் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா்.
விழாவில், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், மாவட்ட ஆட்சியா் ச.உமா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன், மாநகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி, கோயில் உதவி ஆணையா் ரா.இளையராஜா, அறங்காவலா் குழுத் தலைவா் கா.நல்லுசாமி மற்றும் அறங்காவலா்கள், முக்கியப் பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.