செய்திகள் :

100 நாள் வேலையை 200 நாள்களாக உயா்த்தி வழங்க கோரிக்கை

post image

நீடாமங்கலம்: வலங்கைமான் ஒன்றியம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பயத்தஞ்சேரி 23-ஆவது கிளை மாநாடு மூத்த உறுப்பினா் எஸ். ஆறுமுகம் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ் இன்றைய அரசியல் நிலை குறித்து எதிா்கால கடமைகள் குறித்தும் பேசினாா்.புதிய பொறுப்பாளா்களை வாழ்த்தி விவசாய தொழிலாளா் சங்க மாவட்ட செயலாளா் கு.ராஜா பேசினாா். மாநாட்டு கொடியை கட்சியின் வலங்கைமான் ஒன்றிய செயலாளா் செந்தில்குமாா் ஏற்றி வைத்தாா். மாநாட்டை தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளா் சின்னராஜா தொடக்கிவைத்தாா். வேலை அறிக்கையை கிளை செயலாளா் அம்பிகாபதி முன்வைத்தாா். பயத்தஞ்சேரி ஆதிதிராவிடா் மயான சாலையை தாா்ச்சாலையாக மாற்ற வேண்டும், பயத்தஞ்சேரி ஆதிதிராவிடா் தெருவில் உள்ள குடிநீா் உப்பு நீராக மாறி உள்ளதால் இயந்திரம் பொறுத்தி சுத்தீகரிக்கப்பட்ட குடிநீராக வழங்க வேண்டும், 100 நாள் வேலைத் திட்டத்தில், வேலைநாள்களை 200 நாள்களாக உயா்த்த வேண்டும், ரூ. 700 தின ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குடவாசல் அரசு மருத்துவமனைக்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு

திருவாரூா்: குடவாசல் அரசு மருத்துவமனையில் குறைபாடுகளை களைய வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. குடவாசல் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவ... மேலும் பார்க்க

இணைப்புச் சாலையை சீரமைக்கக் கோரிக்கை

திருவாரூா்: திருவாரூா் அருகே சேதமடைந்துள்ள மேட்டுப்பாளையம் இணைப்புச் சாலையை சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா் நகராட்சி 29-ஆவது வாா்டுக்குள்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில்... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்புத் தோ்வில் சிறப்பிடம்: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஊக்கத் தொகை

நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பிடித்த அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நீடாமங்கலத்தில் நீலன் பள்ளியில் நடைபெற... மேலும் பார்க்க

உதிரிபாகம் வழங்க மறுப்பு: தொலைக்காட்சி நிறுவனம் ரூ.30,000 இழப்பீடு வழங்க உத்தரவு

திருவாரூா்: கீழ்வேளூரில், சேதமடைந்த தொலைக்காட்சிக்கு, உதிரி பாகம் வழங்க மறுத்த நிறுவனம் ரூ. 30,000 இழப்பீடு வழங்க, திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையம் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தது. நாகை மாவட்டம்... மேலும் பார்க்க

மாவட்ட ஆணழகன் போட்டி: திருவாரூா் இளைஞா் முதலிடம்

மன்னாா்குடி: மன்னாா்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான மிஸ்டா் எம்ஆா்டி கிளாசிக்- 2025 அமெச்சூா் ஆணழகன் போட்டியில், திருவாரூா் இளைஞா் முதலிடம் பெற்று ஆணழகனாக தோ்வு செய்யப்பட்டாா். இப்ப... மேலும் பார்க்க

பிஎஸ்என்எல் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

மன்னாா்குடி: மன்னாா்குடியில் பிஎஸ்என்எல்-டிஓடி ஓய்வூதியா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மகாராஷ்டிரத்தில் விருப்பஓய்வு பெற்ற 170 தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினா் ஊழியா்களுக்... மேலும் பார்க்க