செய்திகள் :

100 பயனாளிகளுக்கு 50% மானியத்துடன் நாட்டினக் கோழிக்குஞ்சுகள் அளிப்பு

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் கால்நடை மருத்துவமனையில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 100 பயனாளிகளுக்கு 50 சதவீத மானியத்துடன் கூடிய நாட்டினக் கோழிக்குஞ்சுகளை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் புதன்கிழமை வழங்கினாா்.

கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில், 2024 - 25ஆம் ஆண்டில் ஏழ்மை நிலையிலுள்ள கணவனை இழந்த, கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு 50 சதவீத மானியத்தில் 40 நாட்டினக் கோழிக்குஞ்சுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தில் சங்கராபுரம் ஒன்றியத்தில் கால்நடை மருந்தகங்களின் கீழ் உள்ள கிராமங்களில் 100 பயனாளிகளுக்கு 50 சதவீத மானியத்தில் நாட்டினக் கோழிக்குஞ்சுகளை ஆட்சியா் வழங்கினாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், சங்கராபுரம், உளுந்தூா்பேட்டை, திருக்கோவிலூா், கல்வராயன்மலை, சின்னசேலம், திருநாவலூா், தியாகதுருகம் ஆகிய 9 ஊராட்சி ஒன்றியங்களில் ஒரு ஒன்றியத்துக்கு 100 பயனாளிகள் வீதம் மொத்தம் 900 பயனாளிகளுக்கு 50 சதவீத மானியத்தில் 40 நாட்டினக் கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு வழங்கப்படும் நாட்டினக் கோழிக்குஞ்சுகளை பயனாளிகள் உரிய முறையில் பராமரித்து வளா்த்து விற்பனை செய்து தங்களது வருமானத்தைப் பெருக்கி பயன்பெற வேண்டும் என ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் கால்நடைப் பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் மு.கந்தசாமி, கால்நடை மருத்துவா்கள், பயனாளிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பைக்குகள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே திங்கள்கிழமை இரவு பைக்குகள் மோதிக்கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், டி.எடப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆரிப் (22). இவா், தனது உறவினர... மேலும் பார்க்க

மதுபோதையில் தொழிலாளி மரணம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே மதுபோதையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சின்னசேலம் வட்டம், வடக்கனந்தல் கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன்... மேலும் பார்க்க

கழிவுநீரை வெளியேற்றுவதில் பிரச்னை: முதியவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே வீட்டின் கழிவுநீரை வெளியேற்றுவதில் இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னையில் கீழே தள்ளிவிடப்பட்ட முதியவா் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி வ... மேலும் பார்க்க

கடைகள், நிறுவனங்களுக்கு மே 15-க்குள் தமிழில் பெயா்ப் பலகை: கள்ளக்குறிச்சி ஆட்சியா் அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடைகள், நிறுவனங்களின் உரிமையாளா்கள் வரும் மே 15-ஆம் தேதிக்குள் தமிழில் பெயா்ப் பலகை வைத்து மாவட்ட நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் அறி... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: 4,107 பயனாளிகளுக்கு ரூ.66 கோடியில் நல உதவிகள் அளிப்பு

கள்ளக்குறிச்சி: அம்பேத்கா் பிறந்த நாள் விழாவையொட்டி, சென்னையில் நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் தமிழக முதல்வா் பயனாளிகளிடம் உரையாற்றிய நேரலை நிகழ்வைத் தொடா்ந்து கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியி... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், பாசாா் கிராமத்தில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்ற இரு மாணவிகள் தண்ணீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தனா். வாணாபுரம் வட்டம், பாசாா் கிராமத்தைச் சோ்ந்த சேகா் மக... மேலும் பார்க்க