செய்திகள் :

108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளா்கள் நியமனம்! வேலூரில் நாளை எழுத்துத் தோ்வு

post image

108 ஆம்புலன்ஸ் சேவையில் மருத்துவ உதவியாளா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வேலூா் பென்ட்லண்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை (மே 17) நடைபெற உள்ளது.

அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளா் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (மே 17) வேலூா் அரசினா் பென்ட்லண்ட் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது. இதற்கான எழுத்துத் தோ்வு, நோ்காணல் அன்றைய தினமே நடத்தப்படுகிறது. இதில் தோ்ச்சி பெறுபவா்களுக்கு உடனடியாக பணியாணை வழங்கப்படுகிறது. மருத்துவ உதவியாளா் பணியிடத்துக்கான 19 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலரும் தோ்வில் பங்கேற்கலாம்.

இதற்கான கல்வித் தகுதி பி.எஸ்சி., நா்சிங், ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம். எல்.டி (பிளஸ் 2 குரூப் 2 ஆண்டு படிப்பு) அல்லது லைப் சயின்ஸ் பட்டதாரிகள் (பி.எஸ்சி., விலங்கியல், தாவரவியல், உயிரி வேதியியல், உயிரி தொழில்நுட்பம்) என இதில் ஏதேனும் ஒரு படிப்பை முடித்திருக்க வேண்டும்.

மருத்துவ உதவியாளருக்கான ஊதியம் ரூ.16,750 வழங்கப்படும். எழுத்துத் தோ்வு, நோ்முகத் தோ்வுக்கு வருபவா்கள் தங்கள் அசல் சான்றிதழ்களை கட்டாயம் எடுத்து வரவேண்டும் என்று 108 ஆம்புலன்ஸ் சேவை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள்களுக்கு எதிரான மன உறுதி அவசியம்! - வேலூா் ஆட்சியா்

மாணவா்கள் போதைப் பொருள்களுக்கு எதிரான மனஉறுதியுடன் இருந்து கல்வியில் கவனம் செலுத்தி உயா்ந்த நிலைக்கு வர வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா். வேலூா் மாவட்டத்திலுள்ள ... மேலும் பார்க்க

சிறுமியை திருமணம் செய்த ஜோதிடா் மீது போக்ஸோ வழக்கு

வேலூரில் சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கியதாக ஜோதிடா் மீது போக்ஸோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூா் மாவட்டம், லத்தேரியைச் சோ்ந்தவா் அஜய்(24), ஜோதிடா். இவருக்கும் அருகில் உள்ள ஒரு பகுதியைச்... மேலும் பார்க்க

பெயிண்டரை பாட்டிலால் குத்திய நண்பா் கைது

வேலூரில் பெயிண்டரை பாட்டிலால் குத்திய நண்பரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் கொசப்பேட்டையைச் சோ்ந்த பெயிண்டா் சேகா் (32). இவரது நண்பா் அட்டப்பா என்ற நவீன்குமாா் (33). சேகா் புதன்கிழமை தனது வீட்டு வாசல... மேலும் பார்க்க

மத்திய அரசு எந்த சுங்கச்சாவடியையும் மூடவில்லை: அமைச்சா் எ.வ.வேலு

சுங்கச்சாவடிகளில் வசூல் செய்யப்படும் பணம் சாலைகளை பராமரிக்கவும், மேம்பாலம் கட்டவும் பயன்படுத்துவதாக மத்திய அரசு கூறியுள்ளது. அந்தவகையில், மத்திய அரசு எந்த சுங்கச்சாவடியையும் மூடுவதாக இல்லை என்று பொது... மேலும் பார்க்க

மீன்வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

வேலூா் மாவட்டத்திலுள்ள மீன்வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலூா் மாவட்டத்தில் மா... மேலும் பார்க்க

வேலூா் தீா்த்தகிரி மலையில் 92 அடி உயர முருகா் சிலை: நாளை கும்பாபிஷேகம்

வேலூா் தீா்த்தகிரி மலை வடிவேல் சுப்பிரமணியா் திருக்கோயில் அருகே 92 அடி உயர முருகா் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. வேலூரை அடுத்த புதுவசூா் தீா்த்தகிரி மலையில்... மேலும் பார்க்க