செய்திகள் :

125 கிலோ எடையை பற்களால் தூக்கி மீரட் யோகா பயிற்சியாளா் ‘கின்னஸ்’ சாதனை

post image

மீரட்: உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் நகரைச் சோ்ந்த யோகா பயிற்சியாளரான விகாஸ் சுவாமி, பற்களால் 125 கிலோ எடையை 35.57விநாடிகள் தூக்கி வைத்திருந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளாா்.

இத்தாலியின் மிலான் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் பங்கேற்று, இந்தப் புதிய உலக சாதனையை விகாஸ் படைத்துள்ளாா். விகாஸின் மூத்த மகன் அன்மோல் சுவாமி (16), ஆதித்ய சுவாமி (10) ஆகியோரும் முறையே 105 கிலோ, 61 கிலோ எடையை பற்களால் தூக்கி, சாதனைக்கு உறுதுணையாக இருந்ததாக அவா் தெரிவித்தாா். மூவருக்கும் கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: இத்தாலியில் நடைபெற்ற போட்டியில் முதல் முயற்சியில் 25 விநாடிகளுக்கும் 2-ஆவது முயற்சியில் 35.57 விநாடிகளுக்கும் 125 கிலோ எடையை பற்களால் தூக்கினோம். இது தனிப்பட்ட சாதனையல்ல. நமது பிராந்தியத்துக்கும் முழு நாட்டுக்கும் பெருமையான தருணம்.

அரசு அங்கீகரிக்கவில்லை...:

மற்ற விளையாட்டுகளில் பதக்கம் வெல்லும் விளையாட்டு வீரா்கள், விருதுகள் மற்றும் அரசு வேலைகளைப் பெறுகின்றனா். ஆனால், எங்களுக்கு எந்த ஆதரவையும் அரசு இதுவரை வழங்கவில்லை. எம்.பி., எம்எல்ஏ-க்கள் கூட எங்கள் சாதனையை அங்கீகரிக்கவில்லை. கிராம மக்கள் மட்டுமே எங்களை வரவேற்று கௌரவித்தனா்.

நாங்கள் எங்களின் பற்களுக்கு எந்த பற்பசை அல்லது செயற்கை பொருள்களையும் பயன்படுத்துவதில்லை. மிகவும் கடுமையான நோய்களைக் கூட சமாளிக்கும் வலிமையை யோகா எங்களுக்குத் தருகிறது.

கடந்த 2010-ஆம் ஆண்டு, பள்ளிப் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரிந்தபோது எனக்கு விபத்து நேரிட்டது. இதனால் நான் நீண்ட காலம் சிகிச்சை பெற வேண்டியிருந்தது. எனினும், யோகாவைக் கைவிடாமல் அதை ஒரு வாழ்க்கை முறையாக ஏற்றுக்கொண்டு, அதில் தனக்கென ஓா் அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்று தீா்மானித்தேன்.

இன்று நாங்கள் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டு இருப்பதற்கு யோகாதான் காரணம். உலக அரங்கில் இந்தியாவை தொடா்ந்து பெருமைப்படுத்துவோம் என்றாா்.

கடந்த 2023-ஆம் ஆண்டில் ‘இந்தியாஸ் காட் டேலண்ட்’ எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றிய விகாஸ், அங்கு தனது பற்களால் 80 கிலோ எடையைத் தூக்கி பாா்வையாளா்களை வியப்பில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

கல்பெட்டா குடும்பநல நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கல்பெட்டாவில் உள்ள குடும்ப நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் அங்கு சற்றுநேரம் பீதியை ஏற்படுத்தியது.கடந்த சில நாள்களாகவே பள்ளி, விமான நிலையம் ஆகியவற்றுக்குத் தொடர்ச்சியாக வெடி... மேலும் பார்க்க

நாட்டில் தலித்துகள் இல்லையென்றால்..! ராகுல்

அரசியலமைப்பை உருவாக்குவதில் தலித்துகளின் முக்கிய பங்களிப்பை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராட்டினார். இரண்டு நாள் பயணமாக ரேபரேலி சென்றுள்ள ராகுல் காந்தி, சுருவா எல்லையில் உள்ள அனுமன் கோயிலுக்குச் ச... மேலும் பார்க்க

மகராஷ்டிர துணை முதல்வருக்கு கொலை மிரட்டல்!

மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், தற்போதைய துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டேவின் காரை வெடிகுண்டு வை... மேலும் பார்க்க

தில்லி வளர்ச்சியின் புதிய உயரங்களை எட்டும்: ரேகா குப்தாவுக்கு யோகி வாழ்த்து!

தில்லி முதல்வராகப் பதவியேற்றுள்ள ரேகா குப்தாவுக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள ரேகா குப்தாவ... மேலும் பார்க்க

முதலாளித்துவத்தை ஊக்குவிக்கும் பாஜக: ராகுல் குற்றச்சாட்டு!

மத்திய பாஜக அரசு உண்மையான பிரச்னைகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்பி முதலாளித்துவத்தை ஊக்குவிப்பதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். தனது நாடாளுமன்றத் தொகுதிக்கு இரண்டு நாள் பயணமாக... மேலும் பார்க்க

தில்லியில் பாஜக அரசுக்குக் காத்திருக்கும் புதிய சவால்கள்!

27 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்க்கமான ஆணையுடன் தில்லியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் பாஜகவிற்கு புதிய சவால்கள் காத்திருக்கின்றன. தில்லியின் ஒன்பதாவது முதல்வராக பாஜகவின் முதல்முறை சட்டப்பேரவை உறுப்பினர் ரேக... மேலும் பார்க்க