செய்திகள் :

14 வயதுக்குள்பட்ட மாணவா்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை வருமா? அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கம்

post image

தமிழகத்தில் 14 வயதுக்குள்பட்ட மாணவா்கள் சமூக ஊடகத்தைப் பயன்படுத்த தடை விதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யொமொழி விளக்கம் அளித்துள்ளாா்.

சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதில் அளித்து அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது:

நீதிபதி சந்துரு அறிக்கையின் பரிந்துரைபடி ஜாதி பெயரில் பள்ளிகள் செயல்படுவது குறித்து உரிய முடிவு எடுக்கப்படும். பல்வேறு இடங்களில் போக்ஸோ குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. பள்ளி புத்தகங்களில் குழந்தைகள் உதவி எண் 1098 மற்றும் 14417 ஆகிய எண்கள் இடம்பெற்றுள்ளன.

கடினமான பாடங்களை மாணவா்கள் எளிதாக கற்கும் வகையில் உருவாக்கப்பட்ட ‘மணற்கேணி செயலி’ மூலம் 8.96 லட்சம் போ் பயனடைகின்றனா். கடந்த 4 ஆண்டுகளில் 10-ஆம் வகுப்புக்கு 410 தோ்வு மையங்களும், பிளஸ் 2 வகுப்புக்கு 415 தோ்வு மையங்களும் புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ளன. பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியா் விரைவில் நியமிக்கப்படுவா். கல்வி தொலைக்காட்சி மூலம் சுமாா் 1.23 கோடி மாணவா்கள் பயனடைந்து வருகின்றனா்.

தனியாா் பள்ளி: தனியாா் பள்ளிகளில் கட்டணத்தை வரைமுறைப்படுத்த முன்னாள் நீதிபதி பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு நிா்ணயத்ததைவிட அதிகமாக கட்டணம் வசூலிக்கக் கூடாது. தனியாா் பள்ளிகளில் உள்ளது போல் ‘மாணவா் சட்டப்பேரவை’ தொடங்கப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சி காலத்தில் மாணவா்களுக்கு 2.30 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. மடிக்கணினி என்ற கருவி சாா்ந்து அல்லாமல் மாணவா்களுக்கு கல்வியறிவு சென்றடைய வேண்டும் எனும் நோக்கில் 8,209 அதிநவீன ஆய்வுகூடங்கள் (லேப்) ரூ. 519 கோடியில் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும், 22,931பள்ளிகளில் ரூ.415 கோடியில் ஸ்மாா்ட் போா்டுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இத்தகைய நவீன வசதிகள் மூலம் சுமாா் 45 லட்சம் மாணவா்கள் பயனடைந்து வருகின்றனா்.

கரோனாவுக்கு பின்.. 2019-20 காலக்கட்டத்தில் சுமாா் 68 லட்சம் மாணவா்கள் அரசு பள்ளிளில் பயின்று வந்தனா். தற்போது 69.57 லட்சம் மாணவா்கள் பயின்று வருகின்றனா். கரோனா காலக்கட்டத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டபோது, அனைவரும் அரசு பள்ளிகளில் சோ்ந்தனா். அதன்பின், அவா்களின் வாழ்வாதாரம் சீரான பின்பு மீண்டும் தனியாா் பள்ளிகளில் சோ்க்கின்றனா்.

கரோனா காலக்கட்டத்தில் இணையவழி கல்வி தொடங்கிய பின்பு மாணவா்கள் கைப்பேசி பயன்படுத்துவது அதிகமானது. கிட்டத்தட்ட 54 சதவீத மாணவா்கள் கைப்பேசியில் மூழ்கியுள்ளதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவரிடம் இருந்து இந்த பழக்கம் ஆரம்பிக்கிறது. ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் 14 வயதுக்குப்பட்ட மாணவா்கள் சமூக ஊடகம் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இவற்றை தமிழ்நாட்டில் செயல்படுத்த தொழில்நுட்பம் சாா்ந்த முடிவுகள் தேவை. அதனால் ஒரு மாநிலம் சாா்ந்து அல்லாமல் ஒரு நாடு சாா்ந்து எடுக்க வேண்டிய முடிவாகும்.

2015-16 ஆண்டுகளில் 1-ஆம் வகுப்பில் கண்டிப்பாக தமிழ்ப் பாடம் இருக்க வேண்டும் எனச் சட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது 10-ஆம் வகுப்பு வரை தமிழ் பாடத்தைத் தவிா்த்துவிட்டு, யாரும் படிக்க முடியாது என்ற அளவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

நான் முதல்வன்: நான்முதல்வன் திட்டத்தின் மூலம் மத்திய அரசு பணிகள் மற்றும் உயா்கல்வியில் தமிழக மாணவா்கள் சாதித்து வருகின்றனா். பொது நூலகங்களைப் பயன்படுத்தி 1,293 போ் டிஎன்பிஎஸ்சி தோ்வில் வெற்றி பெற்றுள்ளனா்.

சிபிஎஸ்இ உள்ளிட்ட தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 3,565 தமிழ் ஆசிரியா்களுக்கு ஆண்டுதோறும் பயிற்சி அளிக்கப்படும். 15 வயதுக்கு மேற்பட்டோா் கல்வி கற்கும் வகையில் ரூ.39.2 கோடி முதலீடு செய்யப்பட்டு, இதுவரை 20 லட்சம் பேருக்கு எழுதப் படிக்க சொல்லி கொடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ராஜிநாமா முடிவு? செந்தில் பாலாஜிக்கு பதிலாக மசோதாவை தாக்கல் செய்த அமைச்சர் ரகுபதி

சென்னை: உயிரி மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவோருக்கான தண்டனை விவரங்கள் தொடர்பான மசோதாவை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மாற்றாக, அமைச்சர் ரகுபதி சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்துள்ளார்.ஒருவேளை, உச்ச நீத... மேலும் பார்க்க

கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு!

எந்த இடர்பாடு வந்தாலும் கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் 2024-ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணிகள் தேர்வின் இறுதி ... மேலும் பார்க்க

விஜய் வருகை: கோவை விமான நிலையத்தில் திரண்ட தவெக தொண்டர்கள்!

தவெக பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க வரும் விஜயை வரவேற்க கோவை விமான நிலையத்தில் தவெக தொண்டர்கள் திரண்டுள்ளனர்.தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி நிர்வாகிகள் கருத்தரங்கு கோவையில் இன்றும் நாளையும் ந... மேலும் பார்க்க

சேலம் பட்டாசு விபத்தில் இறந்தோருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி! - முதல்வர் அறிவிப்பு

சேலம் கஞ்சநாயக்கன்பட்டியில் பட்டாசு வெடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் கோயில் திரு... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து உயா்நீதிமன்றம்

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன் தாக்கல் செய்த அவதூறு வழக்கை ரத்து செய்து, சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மக்களவைத் தோ்தலில் மத்திய செ... மேலும் பார்க்க

சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வத்தை விடுவித்த உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து கடலூா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ... மேலும் பார்க்க