செய்திகள் :

15 மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்! தனியார் கல்வி மைய இயக்குநர் தலைமறைவு

post image

புது தில்லி: தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியைச் சேர்ந்த தனியார் பொறியியல் மையத்தின் இயக்குநர் சைதான்யானந்த் சரஸ்வதி, 15 மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டு தலைமறைவாகியிருக்கிறார்.

மாணவிகளிடமிருந்து இது தொடர்பாக புகார் வந்திருப்பதாகவும், இதுவரை 12 முதல் 15 மாணவிகளை இவர் பாலியல் துன்புறுத்தல் செய்திருக்கலாம் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி இது தொடர்பாக முதல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதாகவும், பிஜிடிஎம் படிப்புகளில் படித்து வந்த மாணவிகளை இவர் துன்புறுத்தியிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுளள்து.

இதுவரை 32 மாணவிகளிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அதில் 17 பேர், சின்மயானந்த் சரஸ்வதி தங்களிடம் மோசமாக நடந்து கொள்வார், வாட்ஸ்ஆப்களில் மோசமான தகவல்களை அனுப்புவார் என்று குற்றம்சாட்டியிருப்பதாகத் தெரிகிறது.

மேலும், இயக்குநரின் விருப்பத்துக்கு இணங்கும்படி, கல்வி மைய ஊழியர்களும் பேராசிரியர்களும் நிர்பந்தித்ததாகவும் மாணவிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சைதான்யானந்த் தலைமறைவாகிவிட்டதாகவும், அவரது இருப்பிடங்களில் சோதனை நடத்தப்பட்டு பல்வேறு ஆவணங்கள் மற்றும் கணினிகள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

முதற்கட்ட விசாரணையின்போது, சின்மயானந்த் பயன்படுத்தி வந்த போலியான ஐநா நம்பர் பலகையுடன் கூடிய வால்வோ கார் மற்றும் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை காவல்துறை பறிமுதல் செய்திருக்கிறது.

தலைமறைவான சைதான்யானந்த்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவரைப் பற்றி யாருக்கேனும் தகவல் கிடைத்தால் தெரிவிக்கும்படியும் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

Chaitanyananda Saraswati, director of a private engineering institute in Delhi's Vasant Kunj area, is absconding after being accused of sexually harassing 15 girls.

இதையும் படிக்க.. ஜிஎஸ்டி 2.0: ரூ.5 பார்லே-ஜி பிஸ்கெட் விலை குறைந்தது! விலைகளில் நடந்த மேஜிக்

வாக்காளர் பெயரை நீக்க ஆதாருடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண் கட்டாயம்!

வாக்காளர் அட்டையில் பெயரை சேர்ப்பதற்கும், நீக்குவதற்கும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணை இந்திய தேர்தல் ஆணையம் கட்டாயமாக்கியுள்ளது.வாக்காளர்களுக்கு தெரியாமல் பெயர் நீக்கப்படுவதாக மக்களவை எத... மேலும் பார்க்க

லடாக்கில் பாஜக அலுவலகத்துக்கு தீ வைப்பு!

லடாக்கில் உள்ள பாஜக அலுவலகத்துக்குப் போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் அங்குப் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. யூனியன் பிரதேசமாக உள்ள லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி போராட்டம் நடைபெற்று வருகின்றது... மேலும் பார்க்க

அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம்: ஒடிசா அரசு

ஒடிசாவில் வரவிருக்கும் பண்டிகைகளை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே மாத சம்பளம் வழங்குமாறு ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அரசு ஊழியர்களுக்கு வழக்கமாக மாத இறு... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களவை இடைத்தேர்தல் அறிவிப்பு!

ஜம்மு - காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் காலியாகவுள்ள 5 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் புதன்கிழமை அறிவித்துள்ளது.வருகின்ற அக்டோபர் 6 ஆம் தேதி வேட்புமனுத் த... மேலும் பார்க்க

ஆன்லைன் சூதாட்டம்: 3 மாநிலங்களைச் சேர்ந்த 8 பேர் கைது; தெலங்கானா சிஐடி அதிரடி!

இணைய செயலி மூலம் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட மூன்று மாநிலங்களைச் சேர்ந்த 8 ஆப்ரேட்டர்களை தெலங்கானா குற்றப் புலனாய்வுத் துறை(சிஐடி) அதிகாரிகள் கைது செய்தனர். ஆன்லைன் சூதாட்டத்திற்கு இளைஞர்கள் அடிமையா... மேலும் பார்க்க

கர்நாடக எம்.பி.யின் மனைவியிடம் ரூ. 14 லட்சம் மோசடி! பணத்தை மீட்ட அதிகாரிகள்! எப்படி?

பெங்களூரில் கர்நாடக எம்.பி.யின் மனைவியிடம் 'டிஜிட்டல் அரெஸ்ட்' மூலமாக ரூ. 14 லட்சம் மோசடி நடந்துள்ளது. விரைந்து புகார் அளித்ததன்பேரில் அவரது பணம் மீட்கப்பட்டுள்ளது. ஆன்லைன் பண மோசடிகள் நாளுக்கு நாள் அ... மேலும் பார்க்க