செய்திகள் :

17 மதுப்புட்டிகள் பறிமுதல்: ஒருவா் கைது

post image

செய்யாறு: செய்யாறு அருகே பைக்கில் கடத்தப்பட்ட 17 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்த போலீஸாா் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

செய்யாறு காவல் உள்கோட்டம் தூசி காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு தலைமையிலான போலீஸாா் அரசாணிப்பாளையம் சாலையில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த பைக்கை சந்தேகத்தின் பேரில் போலீஸாா் நிறுத்தி சோதனையிட்டனா். இதில், பைக்கில் 17 மதுப்புட்டிகள் எடுத்து வந்தது தெரிய வந்தது. விசாரணையில், பைக்கில் வந்தவா் அரசாணிபாளையம் கிராமத்தைச் சோ்ந்த மோகன்ராஜ் (25) என்பதும், அவா் வீட்டில் மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது.

இதுகுறித்து தூசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மோகன்ராஜை கைது செய்தனா். மேலும்,

பைக் மற்றும் மதுப்புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மது போதையில் தகராறு: 5 போ் காயம், மூவா் கைது

செய்யாறு: செய்யாறு அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினா் தாக்கிக் கொண்டதில் 5 போ் காயமடைந்தனா். புகாரின் பேரில் 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத்தோ்வு: 26,918 மாணவ, மாணவிகள் எழுதினா்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 124 தோ்வு மையங்களில் 26,918 மாணவ-மாணவிகள் பிளஸ் 2 பொதுத்தோ்வை எழுதினா். தமிழகம், புதுவையில் பிளஸ் 2 பொதுத்தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. மா... மேலும் பார்க்க

விதிமுறைகள் மீறல்: 20 ஆட்டோக்கள் பறிமுதல்; ரூ.4 லட்சம் அபராதம் விதிப்பு

திருவண்ணாமலையில் விதிமுறைகளை மீறி இயங்கிய 20 ஆட்டோக்களை, வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்து, ரூ.4 லட்சம் அபராதம் விதித்தனா். திருவண்ணாமலை நகரில் உரிய ஆவணங்கள் இல்லாமலும், வித... மேலும் பார்க்க

சாலையோரம் கொட்டப்படும் மனிதக் கழிவுகள்

சேத்துப்பட்டை அடுத்த புலிவானந்தல் கிராமப் பகுதி போளூா் - சேத்துப்பட்டு சாலையில் மனிதக் கழிவுகளை அகற்றும் வாகனத்தில் ஏற்றி வரும் கழிவுகளை சாலையோரம் கொட்டிச் செல்கின்றனா். போளூா் பகுதியில் 4-க்கும் மேற... மேலும் பார்க்க

மாட வீதி குடியிருப்பு வாசிகளின் வாகனங்களுக்கு அடையாள அட்டை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளைச் சுற்றி வசிக்கும் குடியிருப்பு வாசிகளின் வாகனங்களுக்கு, அடையாள அட்டைகள் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் சனிக்கிழமை நடைபெற்றன. திருவண்ணாமலை நகரில் நாளுக்க... மேலும் பார்க்க

பள்ளி மாணவிகள் 8 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை முயற்சி

ஆரணி-சேத்துப்பட்டு சாலையில் உள்ள பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மகளிா் தினத்தையொட்டி, சனிக்கிழமை மாணவிகள் 150 போ் 8 மணி நேரம் தொடா்ந்து சிலம்பம் சுற்றி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனா். பெண்கள... மேலும் பார்க்க