செய்திகள் :

17 வயது சிறுமி மீது பெட்ரோல் ஊற்றி எரித்த ஆண் நண்பர்!

post image

மும்பையில் 17 வயது சிறுமி அவரது ஆண் நண்பரால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

மும்பையின் அந்தேரி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஜித்து தம்பே என்கிற 30 வயது நபர் ஒருவர் நண்பராக இருந்துள்ளார்.

இவர்கள் இருவரும் சில மாதங்களாக நண்பர்களாக இருந்த நிலையில் அவர்கள் வசிக்கும் பகுதியில் அடிக்கடி சந்தித்துப் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது.

இருவரும் காதலிப்பதாக நினைத்து அந்தச் சிறுமியின் தாயார் வினவியபோது சிறுமி இல்லையென்று மறுத்தார். பின்னர், ஜித்துவிடம் இனிமேல் தனது பெண்ணைச் சந்தித்துப் பேசவேண்டாம் என சில நாள்களுக்கு முன் கூறியுள்ளார்.

இதையும் படிக்க | ஹரியாணா காங்கிரஸ் பெண் தொண்டர் கொல்லப்பட்ட அன்று என்ன நடந்தது?

இந்த நிலையில், கடந்த ஞாயிறன்று (மார்ச் 2) மரோல் காந்தன் பகுதியில் இரவு 11.30 மணியளவில் தனது வீட்டிற்கு அருகில் அந்தச் சிறுமி தனது தோழிகளுடன் இரவு உணவு முடித்துவிட்டு பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஜித்து, திடீரென தனது கையில் வைத்திருந்த பெட்ரோலை அந்தச் சிறுமியின் மீது ஊற்றி தீவைத்ததாகக் கூறப்படுகிறது.

இதில் முகம், கழுத்து, கைகள், கால்கள் என உடலில் 60% இடங்களில் அந்தச் சிறுமிக்கு தீக்காயங்கள் ஏற்பட்டது.

பதறிய நிலையில் உடனடியாக அங்கு வந்த அவரது தாய் தீக்காயங்களுடன் கிடந்த தனது மகளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். பாதிக்கப்பட்ட சிறுமி பேச முடியாத நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து காவல்துறையில் அவர் அளித்தப் புகாரின் பேரில் ஜித்து மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பெட்ரோல் ஊற்றி எரிக்கையில் அவருக்கும் காயங்கள் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

காவல்துறையில் அளித்தப் புகாரில், அந்தச் சிறுமி மருத்துவமனையில் தனது தாயிடம் “என் மீது எந்தத் தவறும் இல்லை. ஜித்து தான் என்மீது பெட்ரோல் ஊற்றி எரித்தான்” எனக் கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர் மீது கொலை முயற்சி, திரவம் வீசி கடுமையான காயங்களை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் உற்பத்தி கொள்முதல் 14 மாதங்களில் இல்லாத அளவு சரிவு!

நாட்டின் உற்பத்திக்கான கொள்முதல் கடந்த மாதத்தில் 56.3 சதவீதமாக குறைந்துள்ளது. இது ஜனவரி மாதத்தில் 57.7 சதவீதமாக இருந்தது. 2023 டிசம்பர் முதல் நாட்டின் உற்பத்திக்கான கொள்முதல் குறைந்துவரும் நிலையில், த... மேலும் பார்க்க

தந்தையின் தலையை வெட்டி காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்ற மகன்!

ஒடிசாவில் தந்தையின் தலையை வெட்டி காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்ற மகனை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தின் சந்துவா கிராமத... மேலும் பார்க்க

திருப்பதி தேவஸ்தான அறைகள் பெற புதிய விதி: தரிசன டிக்கெட் இருந்தால்தான்!

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் தங்கும் அறைகள் ஒதுக்கீட்டில் புதிய விதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.திருமலை திருப்பதி ஏழும... மேலும் பார்க்க

மூடநம்பிக்கை: பச்சிளம் குழந்தைக்கு 40 முறை சூடு வைத்த கொடூரம்!

ஒடிசா மாநிலத்தின் நபரங்பூரில் பச்சிளம் குழந்தைக்கு இரும்பு கம்பியால் 40 முறை சூடு வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டத்தின் ஹண்டல்படா கிராமத்தைச் சேர்ந்த ... மேலும் பார்க்க

ஆறு ஆண்டுகளாக நிரப்பப்படாத மக்களவைத் துணைத் தலைவர் பதவி!

18-ஆவது மக்களவை தொடங்கி 9 மாதங்கள் ஆகியும், இதுவரை அவையின் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க மத்திய அரசு எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருக்கிறது.17-ஆவது மக்களவை முழுவதும் துணைத் தலைவர் பதவி நிரப்பப்... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் ஓர் ஆசிரியர் பள்ளிகள் இத்தனையா?

ஜார்க்கண்டில் 8 ஆயிரம் அரசுப் பள்ளிகள் தலா ஒரு ஆசிரியருடன் செயல்படுவதாக கல்வி அமைச்சர் ராம்தாஸ் சோரன் தெரிவித்தார்.ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில், ஆசிரியர்கள... மேலும் பார்க்க