செய்திகள் :

2-வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாடுவாரா? ஷுப்மன் கில் பதில்!

post image

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாடுவாரா என்பது குறித்து இந்திய அணியின் துணைக் கேப்டன் ஷுப்மன் கில் பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் நேற்று (பிப்ரவரி 6) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

இதையும் படிக்க:ஃபீல்டிங்கில் சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித்..!

முழங்கால் வீக்கம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் விராட் கோலி விளையாடவில்லை. இதனால், நாளை மறுநாள் (பிப்ரவரி 9) கட்டாக்கில் நடைபெறும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஷுப்மன் கில் பதில்

விராட் கோலி நன்றாக இருப்பதாகவும், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவர் அணியில் இடம்பெற்று விளையாடுவார் எனவும் இந்திய அணியின் துணைக் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

ஷுப்மன் கில்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: விராட் கோலிக்கு பயப்படும்படியான அளவுக்கு ஒன்றுமில்லை. முதல் போட்டி தொடங்குவதற்கு முதல் நாள் அவர் நன்றாக பயிற்சியில் ஈடுபட்டார். ஆனால், போட்டியன்று காலை அவருக்கு முழங்காலில் வீக்கம் ஏற்படவே, விளையாட முடியாமல் போனது. அவர் இரண்டாவது போட்டியில் கண்டிப்பாக விளையாடுவார் என்றார்.

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இதனை கற்றுக் கொண்டேன்: ஷஃபாலி வர்மா

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் கற்றுக் கொண்ட விஷயம் குறித்து தில்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா பேசியுள்ளார்.மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் தில்லி கேபிடல்ஸ் அணி இரண்டு முற... மேலும் பார்க்க

இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு நிரந்த இடமில்லாதது ஆச்சரியமளிக்கிறது: ரிக்கி பாண்டிங்

இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு நிரந்த இடமில்லாதது ஆச்சரியமளிப்பதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வரு... மேலும் பார்க்க

பந்துவீச்சில் சந்தேகம்: அயர்லாந்து வீராங்கனை பந்துவீச தடை!

பந்துவீச்சில் சந்தேகத்தால் அயர்லாந்து வீராங்கனை பந்துவீச தடைவிதிக்கப்பட்டுள்ளது.அயர்லாந்து இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஐமீ மாகுய்ர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீசுவதற்கு தடைவிதிப்பதாக தெரி... மேலும் பார்க்க

2ஆம் நாள் முடிவு: இருவர் சதம், 73 ரன்கள் முன்னிலையில் ஆஸி.!

இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் ஆஸி. அணி 73 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. காலே திடலில் நேற்று (பிப்.6) தொடங்கிய 2ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 257 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இத... மேலும் பார்க்க

அதிரடியாக சதமடித்த அலெக்ஸ் கேரி..! கட்டியணைத்த ஸ்டீவ் ஸ்மித்!

இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் அலெக்ஸ் கேரி சதம் அடித்தார். ஸ்டீவ் ஸ்மித் சதமடிக்கும்போது 79 ரன்களில் இருந்த அலெக்ஸ் கேரி தற்போது அதிரடியாக விளையாடி ஸ்மித்தை விடவும் அதிகமான ரன்களை அடித்துள... மேலும் பார்க்க

ஆசியாவில் அதிக சதங்கள்: 36-ஆவது சதமடித்த ஸ்டீவ் ஸ்மித்..!

டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 36ஆவது சதத்தினை நிறைவு செய்தார் ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித். இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் 191 பந்துகளில் பவுண்டரி அடித்து சதமடித்தார் ஆஸி. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். முன்னதாக... மேலும் பார்க்க