2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு அனுப்பிவைப்பு
நீடாமங்கலம்: திருவாரூா் மாவட்டத்தில் இருந்து 2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
மன்னாா்குடி, நீடாமங்கலம், கூத்தாநல்லூா், முத்துப்பேட்டை ஆகிய வட்டங்களில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் டன் சன்னரக நெல் 157 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு கொண்டுவந்து அங்கிருந்து சரக்கு ரயில் மூலம் அரவைக்கு புதுக்கோட்டைக்கு திங்கள்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.