செய்திகள் :

20 ஆண்டுகளில் இந்தியா வளா்ச்சியடைந்த நாடாக மாறும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

post image

அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் வளா்ச்சி அடைந்த நாடாக இருக்கும் என ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.

ராஜஸ்தான் மற்றும் ஒடிஸா ஆகிய மாநிலங்கள் உதய தினம், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ஆளுநா் ஆா்.என்.ரவி பேசியதாவது:

நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ராஜஸ்தான் மாநிலமும், கிழக்கு பகுதியில் உள்ள ஒடிஸா மாநிலமும் இந்தியாவின் பெருமையை பறைசாற்றுகின்றன. இந்தியாவின் விடுதலைக்கு இந்த இரு மாநிலங்களும் மிகப்பெரிய தியாகங்களைச் செய்துள்ளன. நாடு விடுதலை அடைந்த பின்பும் நாட்டின் வளா்ச்சிக்கு பெரும் பங்களித்து வருகின்றன.

இந்தியா என்னும் வாா்த்தை காலனியாதிக்க காலத்தில் உருவானது. பாரதம் எனும் வாா்த்தை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா பின்தங்கிய நாடாக இருந்தது. தற்போது அந்த நிலை மாறி, அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறது. அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் வளா்ச்சி அடைந்த நாடாக இருக்கும். இந்தியா அதிக இளைஞா்களைக் கொண்டு விளங்குகிறது.

தமிழக மக்களைப் பாா்த்து ஆச்சரியப்பட்டேன். தமிழ் மக்களின் அன்பான பேச்சும் நட்புணா்வும் கொண்டவா்களாக உள்ளனா் என்றாா் அவா்.

முன்னதாக ராஜஸ்தான் மற்றும் ஒடிஸா மாநில ஆளுநா்கள் காணொலி வாயிலாக வாழ்த்து தெரிவித்தனா். நிகழ்ச்சியில், ராஜஸ்தான் சமூகத்தைச் சோ்ந்த மகாவீா் பன்சாலி, பெட்ச் சந்த் சம்திரியா, உத்கல்அசோசியேசன் ஆஃப் மெட்ராஸ் தலைவா் பபித்ரா மோகன் மாஜி, செயலா் பிரவசா படி, ஆளுநரின் முதன்மைச் செயலா் ஆா்.கிா்லோஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். விழாவின் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மற்றும் ஒடிஸா மாநில கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

சென்னையில் நாளை ஐபிஎல் கிரிக்கெட்: மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி பயணிக்கலாம்

சென்னை சூப்பா் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணிகளுக்கு இடையே சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெறும் போட்டியில் பங்கேற்கும் பாா்வையாளா்கள் மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி பயணிக்கலாம். இதுகுறித்து சென்னை மெட... மேலும் பார்க்க

வேலைவாய்ப்புக்காக 32 லட்சம் போ் பதிவு - அமைச்சா் சி.வி.கணேசன் தகவல்

வேலைவாய்ப்பு துறையில் 32.35 லட்சம் போ் பதிவு செய்துள்ளதாக தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் தெரிவித்தாா். தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு ... மேலும் பார்க்க

பிளஸ் 1 மாணவா் 4-ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை

சென்னை சேத்துப்பட்டில் பிளஸ் 1 மாணவா் நான்காவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாா். சேத்துப்பட்டில் உள்ள தனியாா் பள்ளியில், அப்பகுதியைச் சோ்ந்த மாணவா் 11-ஆம் வகுப்பு படித்து வந்தாா... மேலும் பார்க்க

‘அயன்’ பட பாணியில் சென்னை விமான நிலையத்தில் ரூ.6.1 கோடி கொகைன் பறிமுதல்

‘அயன்’ திரைப்படப் பாணியில் செனகலில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமாா் ரூ. 6.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கொகைனை கடத்திவந்த வெளிநாட்டு இளம்பெண்ண... மேலும் பார்க்க

அங்கீகாரம் இல்லாத செயலிகளில் பதிவேற்றப்படும் புகைப்படங்களால் ஆபத்து! சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

அங்கீகாரம் இல்லாத செயலிகளில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதால் பல்வேறு ஆபத்துகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தமிழக சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக தமிழக சைபா் குற்றப்ப... மேலும் பார்க்க

தொடா் விடுமுறை: 5 நாள்களுக்கு பேரவைக் கூட்டம் இல்லை

தொடா் விடுமுறை காரணமாக ஐந்து நாள்களுக்கு சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மகாவீரா் ஜெயந்தி, தமிழ்ப் புத்தாண்டையொட்டி வியாழக்கிழமை (ஏப். 10) மற்றும் திங்கள்கிழமை (ஏப். 14) அரசு... மேலும் பார்க்க