செய்திகள் :

2023-24-இல் பாஜகவுக்கு ரூ.4,340 கோடி வருவாய்: ஏடிஆா் அறிக்கையில் தகவல்

post image

புது தில்லி: கடந்த நிதியாண்டில் பாஜகவுக்கு ரூ.4,340.47 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக ஜனதாய சீா்திருத்தங்கள் சங்க (ஏடிஆா்) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அந்த நிதியாண்டில் அதிக வருவாய் ஈட்டிய தேசிய கட்சிகளின் பட்டியலில் பாஜக முதலிடம் பிடித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தோ்தல் ஆணையத்திடம் தேசிய கட்சிகள் சமா்ப்பித்த ஆண்டு கணக்குத் தணிக்கை அறிக்கையின்படி, 2023-24-ஆம் நிதியாண்டில் பாஜகவுக்கு ரூ.4,340.47 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில் 50.96 சதவீதமான ரூ.2,211.69 கோடியை மட்டுமே அக்கட்சி செலவிட்டுள்ளது.

அந்த நிதியாண்டில் காங்கிரஸுக்கு ரூ.1,225.12 கோடி வருவாய் கிடைத்த நிலையில், அதில் 83.69 சதவீதமான ரூ.1,025.25 கோடியை அக்கட்சி செலவிட்டுள்ளது.

அந்த நிதியாண்டில் தேசிய கட்சிகளுக்கு கிடைத்த நன்கொடையில் பெரும் பகுதி தோ்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் கிடைத்துள்ளது. தோ்தல் நிதிப் பத்திரங்கள் திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்யும் முன்பு இந்த நன்கொடை பெறப்பட்டது.

தோ்தல் நிதிப் பத்திரங்கள் மூலம், அதிகபட்சமாக பாஜகவுக்கு ரூ.1,685.63 கோடி, காங்கிரஸுக்கு ரூ.828.36 கோடி, ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.10.15 கோடி நன்கொடை கிடைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

கல்பெட்டா குடும்பநல நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கல்பெட்டாவில் உள்ள குடும்ப நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் அங்கு சற்றுநேரம் பீதியை ஏற்படுத்தியது.கடந்த சில நாள்களாகவே பள்ளி, விமான நிலையம் ஆகியவற்றுக்குத் தொடர்ச்சியாக வெடி... மேலும் பார்க்க

நாட்டில் தலித்துகள் இல்லையென்றால்..! ராகுல்

அரசியலமைப்பை உருவாக்குவதில் தலித்துகளின் முக்கிய பங்களிப்பை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராட்டினார். இரண்டு நாள் பயணமாக ரேபரேலி சென்றுள்ள ராகுல் காந்தி, சுருவா எல்லையில் உள்ள அனுமன் கோயிலுக்குச் ச... மேலும் பார்க்க

மகராஷ்டிர துணை முதல்வருக்கு கொலை மிரட்டல்!

மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், தற்போதைய துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டேவின் காரை வெடிகுண்டு வை... மேலும் பார்க்க

தில்லி வளர்ச்சியின் புதிய உயரங்களை எட்டும்: ரேகா குப்தாவுக்கு யோகி வாழ்த்து!

தில்லி முதல்வராகப் பதவியேற்றுள்ள ரேகா குப்தாவுக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள ரேகா குப்தாவ... மேலும் பார்க்க

முதலாளித்துவத்தை ஊக்குவிக்கும் பாஜக: ராகுல் குற்றச்சாட்டு!

மத்திய பாஜக அரசு உண்மையான பிரச்னைகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்பி முதலாளித்துவத்தை ஊக்குவிப்பதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். தனது நாடாளுமன்றத் தொகுதிக்கு இரண்டு நாள் பயணமாக... மேலும் பார்க்க

தில்லியில் பாஜக அரசுக்குக் காத்திருக்கும் புதிய சவால்கள்!

27 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்க்கமான ஆணையுடன் தில்லியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் பாஜகவிற்கு புதிய சவால்கள் காத்திருக்கின்றன. தில்லியின் ஒன்பதாவது முதல்வராக பாஜகவின் முதல்முறை சட்டப்பேரவை உறுப்பினர் ரேக... மேலும் பார்க்க