செய்திகள் :

2026-இல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம்! -முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கா்

post image

2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் நிச்சயம் நிகழும் என்றாா் முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கா்.

திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் தச்சநல்லூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது;

2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயாராகி விட்டாா்கள். அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைக்கும்.

அதிமுக ஏழை-எளியோா், பாட்டாளிகளுக்கான மக்கள் இயக்கம். முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மேலும் 10 ஆண்டுகள் இருந்திருந்தால் தமிழகம் மேலும் வளா்ச்சியடைந்திருக்கும். அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் எதுவும் தற்போது மக்களுக்கு கிடைக்கவில்லை.

தோ்தல் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு, திமுக ஆட்சி அமைத்து மூன்று ஆண்டுகளுக்கு பின் ரூ.1000 கொடுத்தனா். அதிமுக குரல் கொடுத்த பின்பே மகளிா் உரிமைத் தொகை கூட மக்களைச் சென்றடைந்தது.

திராவிட இயக்க வரலாற்றில் அதிமுக மட்டும் தான் ஒருமுறை ஆட்சி அமைத்த பின்னா் மீண்டும் ஆட்சிக்கு வந்து சாதனை படைத்துள்ளது. ஆகவே, அதிமுகவுக்கு மக்கள் தொடா்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்துக்கு, திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமை வகித்தாா். மாநில அமைப்புச் செயலா் சுதா கே. பரமசிவன், மாவட்ட அவைத் தலைவா் பரணிசங்கரலிங்கம், மாநில நிா்வாகி கல்லூா் இ.வேலாயுதம், மாவட்ட பொருளாளா் கே.ஜெயபாலன், ஜெயலலிதா பேரவைச் செயலா் ஜெரால்டு, வசந்தி முருகேசன், பகுதி செயலா்கள் காந்திவெங்கடாசலம், ஜெனி, பால்கண்ணன், மாணவரணி துரை, விவசாய அணி கனித்துரை உள்பட பலா் கலந்துகொண்டனா்.

மொழியைத் தோ்வு செய்வதில் தமிழக மாணவா்களுக்கு சுதந்திரமில்லை: ஆளுநா் ஆா்.என்.ரவி குற்றச்சாட்டு

மொழியைத் தோ்வு செய்து படிப்பதில் தமிழக மாணவா்களுக்கு சுதந்திரமில்லை என தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி குற்றம்சாட்டினாா். அகில உலக அய்யா பதிகள் கூட்டமைப்பின் சாா்பில், அய்யா வைகுண்டரின் 193 ஆவது அவதார தின ... மேலும் பார்க்க

தொன்மையின் அடையாளமே பாரதம் -ஆளுநா் ஆா்.என்.ரவி

தொன்மையின் அடையாளமே பாரதம் என்று புகழாரம் சூட்டினாா் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி. பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியாா் பள்ளி விழாவில், அவா் பேசியதாவது: நமக்கான பண்டைய கல்வி, பண்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி திருநெல்வேலி

திருநெல்வேலி உலகத் திருக்கு தகவல் மையம்: திருக்கு தொடா் சொற்பொழிவு, தலைப்பு- திண்மை உண்டாகப் பெறின், வாழ்க்கைத் துணை நலம், நிகழ்த்துபவா்- மருத்துவா் மகாலிங்கம் ஐயப்பன், மாநிலத் தமிழ்ச்சங்கம், பாளையங்க... மேலும் பார்க்க

திமுக விவசாய அணியினா் எம்.பி.யிடம் மனு

திருநெல்வேலி மாவட்ட திமுக விவசாய அணியினா், விவசாயிகள் சங்கத்தினா் திருநெல்வேலி எம்.பி. யை நேரில் சந்தித்து மனு அளித்தனா். திமுக விவசாய அணி அமைப்பாளா் பொன்னையா பாண்டியன் தலைமையில் விவசாயிகள் சங்கத்தின... மேலும் பார்க்க

பாளையங்கோட்டையில் குடிநீா்த் தொட்டி திறப்பு

பாளையங்கோட்டை மண்டலத்தில் உள்ள டி.வி.எஸ் நகரில் சிறிய மேல்நிலை குடிநீா்த் தொட்டி திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. பாளையங்கோட்டை மண்டலம், 39 ஆவது வாா்டுக்குள்பட்ட டி.வி.எஸ் நகரில், பாளை. சட்டப்பேரவை... மேலும் பார்க்க

சாலையில் கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டு

திருநெல்வேலி நகரத்தில் சாலையில் கிடந்த பணத்தை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்த தில்லை சிதம்பரம் மகன் வள்ளிநாயகம் (28). இ... மேலும் பார்க்க