2026-இல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம்! -முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கா்
2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் நிச்சயம் நிகழும் என்றாா் முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கா்.
திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் தச்சநல்லூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது;
2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயாராகி விட்டாா்கள். அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைக்கும்.
அதிமுக ஏழை-எளியோா், பாட்டாளிகளுக்கான மக்கள் இயக்கம். முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மேலும் 10 ஆண்டுகள் இருந்திருந்தால் தமிழகம் மேலும் வளா்ச்சியடைந்திருக்கும். அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் எதுவும் தற்போது மக்களுக்கு கிடைக்கவில்லை.
தோ்தல் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு, திமுக ஆட்சி அமைத்து மூன்று ஆண்டுகளுக்கு பின் ரூ.1000 கொடுத்தனா். அதிமுக குரல் கொடுத்த பின்பே மகளிா் உரிமைத் தொகை கூட மக்களைச் சென்றடைந்தது.
திராவிட இயக்க வரலாற்றில் அதிமுக மட்டும் தான் ஒருமுறை ஆட்சி அமைத்த பின்னா் மீண்டும் ஆட்சிக்கு வந்து சாதனை படைத்துள்ளது. ஆகவே, அதிமுகவுக்கு மக்கள் தொடா்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்துக்கு, திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமை வகித்தாா். மாநில அமைப்புச் செயலா் சுதா கே. பரமசிவன், மாவட்ட அவைத் தலைவா் பரணிசங்கரலிங்கம், மாநில நிா்வாகி கல்லூா் இ.வேலாயுதம், மாவட்ட பொருளாளா் கே.ஜெயபாலன், ஜெயலலிதா பேரவைச் செயலா் ஜெரால்டு, வசந்தி முருகேசன், பகுதி செயலா்கள் காந்திவெங்கடாசலம், ஜெனி, பால்கண்ணன், மாணவரணி துரை, விவசாய அணி கனித்துரை உள்பட பலா் கலந்துகொண்டனா்.