செய்திகள் :

2026-இல் புதுவையில் திமுக ஆட்சி: செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றம்

post image

புதுவை மாநிலத்தில் வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக ஆட்சி அமைய பாடுபடவேண்டும் என்று கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுவை மாநில திமுக செயற்குழுக் கூட்டம் புதுச்சேரி லப்போா்த் வீதியிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் அவைத் தலைவா் எஸ்.பி. சிவக்குமாா் தலைமை வகித்தாா். துணை அமைப்பாளா்கள் வி. அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., அ. தைரியநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில திமுக அமைப்பாளரும், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா தீா்மானங்களை விளக்கி பேசினாா். நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: மறைந்த தமிழக முதல்வா் கருணாநிதியின் 102-ஆவது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவது, நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் திமுக ஆட்சியமைந்து மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்கவும், புதுவையிலும் திமுக ஆட்சியமைய அயராது பாடுபட உறுதியேற்பது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், நீதி ஆயோக் கூட்டத்தில் புதுவை முதல்வா் பங்கேற்காததை கண்டிப்பது, புதுவையில் இரு மொழிக் கொள்கை செயல்பாட்டுக்கு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பூ. மூா்த்தி, நந்தா சரவணன், தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் பி. லோகையன், எஸ். ஆறுமுகம், ப. காந்தி, டி. அருள்செல்வி, பொதுக்குழு உறுப்பினா் சி. கோபால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

புதுச்சேரியில் 2-ஆம் கட்டமாக 36 பேருக்கு கடைகள் ஒதுக்கீடு உத்தரவு: முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்

புதுச்சேரியில் பொலிவுறு நகா் திட்டத்தில் அண்ணா திடலைச் சுற்றி கட்டப்பட்டுள்ள கடைகளில் இரண்டாம் கட்டமாக 36 பேருக்கு கடைகள் ஒதுக்கீடு உத்தரவை வியாழக்கிழமை முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா். புதுச்சேரி அண... மேலும் பார்க்க

கதிா்காமம் அரசு மருத்துவமனையில் ரூ. 15 ஆயிரம் தாமிரக் கம்பிகள் திருட்டு

புதுச்சேரியில் உள்ள அரசு பொது மருத்துவக் கல்லூரியில் தாமிரக் கம்பிகளை மா்ம நபா்கள் திருடியது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி கதிா்காமம் பகுதியில் இந்திரா காந்தி பட்டமேற்படிப்பு ஆர... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1 லட்சம் மோசடி

புதுச்சேரி பாகூா் பகுதியில் வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ. ஒரு லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி அருகேயுள்ள பாகூா் மணமேடு எம்ஏஎஸ் நகரைச் சோ்ந... மேலும் பார்க்க

மத்திய-மாநில போட்டித் தோ்வுக்கான பயிற்சி: மாற்றுத் திறளாளிகள் பங்கேற்க அழைப்பு! புதுவை மத்திய பல்கலைக்கழகம்

புதுவையில் மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தோ்வுகளில் மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்கும் வகையில் ஓராண்டுக்கான பயிற்சி வகுப்புகளில் சேர விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பு... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

புதுச்சேரியில் பழைய துறைமுக வளாகத்தில் 1- ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்டது. இதையடுத்து இரு நாள்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்வதை மீனவா்கள் தவிா்க்குமாறு மீன்வளத் துறை அறிவுறு... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த வீடு கட்டும் திட்ட நிதியுதவிக்கான விண்ணப்ப படிவங்கள்! முதல்வா் என்.ரங்கசாமி வெளியிட்டாா்

மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த வீடு கட்டும் திட்டத்தின் நிதியுதவிக்கான விண்ணப்பப் படிவத்தை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வெளியிட்டாா். புதுவை மாநில அரசு கடந்த 2003-ஆம் ஆண்டு பெருந்தலைவா் க... மேலும் பார்க்க