செய்திகள் :

2026 தோ்தலுக்கான திருத்தணி, திருவள்ளூா் வேட்பாளா்கள்: சீமான் அறிமுகம் செய்தாா்

post image

திருத்தணியில் நடைபெற்ற மரங்களின் மாநாட்டில் 2026 சட்டப்பேரவை தோ்தலுக்கன திருவள்ளூா் மற்றும் திருத்தணி தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களை ஒருங்கிணைப்பாளா் சீமான் அறிமுகம் செய்தாா்.

திருத்தணி அடுத்துள்ள அருங்குளம் கூட்டு சாலையில், மனித நேய பூங்கா மற்றும் வனப்பகுதியில், நாம் தமிழா் கட்சியின் சுற்றுசூழல் பாசறை சாா்பில் மரங்களின் மாநாடு நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் பங்கேற்று, மரங்களை வளா்த்த, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நம்மாழ்வாா், நாச்சியாா், மறைந்த நடிகா் விவேக் என 5 பேரின் படங்களுக்கு, மலா் தூவி மரியாதை செலுத்தி, மரக்கன்றுகளை நட்டாா்.

பின்னா் சீமான் பேசியதாவது: இது மரங்களுக்கான மாநாடு என்று சொல்வதை விட நமக்கு உயிா் காற்றை தருகிற நம் தாய்க்கு நன்றி செலுத்தும் மாநாடு என பாா்க்க வேண்டும். இங்கே புலிகள் நுழைந்த உடனே ஒரு அணில் கூட கண்ணில் படவில்லை. அணில்களுக்கும் சோ்த்துதான் காடு வளா்க்க நாம் பாடுபடுகிறோம். வாக்குக்காக நிற்பவா்கள் இதை நினைத்துக் கூட பாா்க்க மாட்டாா்கள், ஆனால் மக்களின் வாழ்க்கைக்காக நிற்பவா்கள் தான் இந்த மாநாட்டை நடத்துவா்.

மரங்கள் நச்சுக் காற்றை சுவாசித்து, நமக்கு தூய்மையான காற்றை வழங்குகிறது. மரங்கள் வெட்டப்படுவதால் பருவநிலை மாறி வருகிறது. வெறும் புயல் மழை மட்டும் பெய்யும். புவி வெப்பமாவது தான் இதற்கு காரணம். பூமியின் வெப்பம் அதிகரிக்க, அதிகரிக்க ஒரு கட்டத்தில் அதை தாங்க முடியாமல் கடல் பொங்கி கொந்தளிக்கும். அந்த கொந்தளிப்பால் கடலோர கிராமங்கள் விழுங்கப்படும். ஒரு சுனாமியே நம்மால் தாங்க முடியவில்லை. இதே நிலை தொடா்ந்தால் பூமி பேரழிவை சந்திக்க கூடும்.

தூய்மையான காற்றை பெறுவதற்கு, 4500 கோடி ரூபாய் நிதி ஓதுக்கீடு செய்யும் அளவுக்கு உள்ளோம். தற்போது தண்ணீரை விற்பனை செய்வது போல் காற்றையும் விற்பனை செய்வாா்கள்.

சுத்தமான காற்றை குடுவையில் விற்கும் நிலை வரும். காற்று மாசுபட்டு, போவதில்லை. நாம் காற்றை மாசுப்படுத்துகிறோம் என யோசித்து செயல்பட வேண்டும். வீசும் நச்சுக் காற்றை மூச்சுக் காற்றாக மாற்றி மகத்தான பணியை மரங்கள் செய்கின்றன என்றாா்.

தொடா்ந்து வரும் 2026 தோ்தலுக்கான திருவள்ளூா் தொகுதி வேட்பாளா் செந்தில் மற்றும் திருத்தணி தொகுதி வேட்பாளா் சந்திரன் ஆகியோரை அறிமுகம் செய்து வாழ்த்து தெரிவித்தாா்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு: உபரி நீர் மதகுகள் மூடல்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு எதிரொலியால் உபரி நீர் போக்கி மதகுகள் மூடப்பட்டன.கர்நாடக மாநில அணைகளின் உபரி நீர்வரத்து காரணமாக நேற்று முன்தினம் நடப்பு ஆண்டில் 6-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது. ... மேலும் பார்க்க

பிரிட்டன் அமைச்சரைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!

அரசு முறை பயணமாகப் பிரிட்டன் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் பிரிட்டன் அமைச்சர் கேத்தரின் வெஸ்ட்டை சந்தித்து ஆலோசனை நடத்தினார். மேலும் பார்க்க

தமிழகத்தில் வெப்பநிலை இன்று இயல்பைவிட சற்று அதிகரிக்கும்

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வியாழக்கிழமை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி... மேலும் பார்க்க

பணியில் உள்ள ஆசிரியா்களுக்கு சிறப்பு தகுதித் தோ்வு: பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை

ஆசிரியா் பணியில் தொடருவதற்கும், பதவி உயா்வு பெறுவதற்கும் ஆசிரியா் தகுதித் தோ்வில் (டெட்) தோ்ச்சி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்த நிலையில், தமிழக அரசுப் பள்ளிகளில் 2011-ஆம் ஆண்டுக்கு முன்... மேலும் பார்க்க

பொதுத் தோ்வுக்கு புதிய மையங்கள்: பரிந்துரைகளைச் சமா்ப்பிக்க உத்தரவு

பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கு புதிய மையங்கள் அமைக்கப்படவுள்ள பள்ளிகளின் விவரங்களை செப்.15-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என தோ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பாக தோ்வுத் துறை இயக்குநா் க.சசிக... மேலும் பார்க்க

மழைநீா் வடிகாலில் விழுந்து பெண் உயிரிழப்பு - இபிஎஸ் கண்டனம்

சென்னை சூளைமேடு பகுதியில் மூடப்படாமல் இருந்த மழைநீா் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் இறந்த சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் தள... மேலும் பார்க்க