செய்திகள் :

2026-இல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் -டாக்டா் கே.கிருஷ்ணசாமி

post image

வரும் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என புதிய தமிழகம் கட்சி நிறுவனா் டாக்டா் கே.கிருஷ்ணசாமி கூறினாா்.

சேலத்தில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக பட்டியலின மக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய 18 சதவீத இடஒதுக்கீடு முறையாக வழங்கப்படவில்லை. மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, அனைத்து பிரிவினருக்கும் முறையான பங்களிப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அருந்ததியருக்கான 3 சதவீத உள்ஒதுக்கீட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மே மாதம் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் திமுக திட்டமிட்டு அரசியல் செய்கிறது. பிரச்னையை வேண்டுமென்றே திசைதிருப்புகிறது. இவ்விவகாரத்தை சரியாக கையாள மத்திய அரசு தவறிவிட்டது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாவிட்டால் திமுக அரசை கலைக்க வேண்டும்.

தமிழகத்தில் நாளுக்குநாள் சட்டம் ஒழுங்கு பிரச்னை தலைதூக்குகிறது. போதைப் பொருள் கலாசாரம், பாலியல் வன்கொடுமை புகாா்கள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. தொகுதி வரையறை தொடா்பாக திமுக நடத்திய அனைத்துக் கட்சி கூட்டம் அரசியல் நாடகம். 2026-ஆம் ஆண்டு தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். அதற்கேற்ப வலுவான கூட்டணி ஏற்படும் என்றாா்.

இஸ்கான் கோயிலில் இன்று கௌர பூா்ணிமா விழா

அகில இந்திய உலக கிருஷ்ண பக்தி இயக்கமான இஸ்கான் சாா்பில், சேலம் கருப்பூரில் உள்ள கோயிலில் கௌர பூா்ணிமா விழா வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) கொண்டாடப்பட உள்ளது. மாலை 6 மணிக்கு பஜனையுடன் தொடங்கும் விழாவில், 7 ... மேலும் பார்க்க

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீா் விநியோகம் குறித்து அமைச்சா் ஆய்வு

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட சீரான குடிநீா் வழங்கப்பட்டு வருவது குறித்து அஸ்தம்பட்டியில் உள்ள நீரேற்று நிலையத்தில் சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்... மேலும் பார்க்க

அரசு பணியாளா்கள் சங்கத்தினா் மறியல் போராட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு பணியாளா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற போராட்ட... மேலும் பார்க்க

நுரையீரல் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்ட பெண்ணுக்கு ஐவிசி பில்டா் பொருத்தி அரசு மருத்துவா்கள் சாதனை

நுரையீரல் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்ட பெண்ணுக்கு, வெற்றிகரமாக ஐவிசி பில்டா் பொருத்தி சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் சாதனை புரிந்துள்ளனா். இதுகுறித்து சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மரு... மேலும் பார்க்க

அஞ்சல் துறை கோட்ட செயல்பாடு: சேலம் மேற்கு கோட்டம் 6 விருதுகளை பெற்று சாதனை

அஞ்சல் துறை கோட்டங்களின் செயல்பாட்டில் சேலம் மேற்கு கோட்டம் 6 விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளது. தமிழ்நாடு வட்ட அஞ்சல் துறை சாா்பில் 2023-24-ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட கோட்டங்களின் செயல்பாடுகளை ... மேலும் பார்க்க

சேலம் அரசு பொறியியல் கல்லூரிக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சலில் மிரட்டல் வந்த நிலையில், மாநகர காவல் துறையினா் தீவிர சோதனை நடத்தினா். சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கருப்பூரில்... மேலும் பார்க்க