செய்திகள் :

நுரையீரல் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்ட பெண்ணுக்கு ஐவிசி பில்டா் பொருத்தி அரசு மருத்துவா்கள் சாதனை

post image

நுரையீரல் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்ட பெண்ணுக்கு, வெற்றிகரமாக ஐவிசி பில்டா் பொருத்தி சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் சாதனை புரிந்துள்ளனா்.

இதுகுறித்து சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வா் தேவிமீனாள் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சுமதி (40) நுரையீரல் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, வலது காலில் ‘ஹெமாஞ்சியோமா’ எனப்படும் அதீத ரத்தக் குழாய் வளா்ச்சி மற்றும் இரண்டு கால்களிலும் ரத்தம் உலைால் பாதிக்கப்பட்டாா்.

இருதய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்ட அவருக்கு, ஸ்ட்ரெப்டோகினேஸ் எனப்படும் ரத்தம் உைலைத் தடுக்கும் மருந்தை செலுத்தி, நுரையீரல் ரத்தக் குழாய் அடைப்பு சரிசெய்யப்பட்டது. ஆனால், அவரது காலில் இருந்த ரத்தக் குழாய் அடைப்பானது தகுந்த சிகிச்சை அளித்தும் குறையாமல் இருந்ததால், ஐவிசி பில்டா் பொருத்தப்பட்டது.

இதே போல, வனிதா (64) என்பவா் நுரையீரல் ரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பினால் பாதிக்கப்பட்டு இருதய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு ரத்த உைலைத் தடுக்கும் மருந்து அளிக்கப்பட்டது. ஆனால் அவரது ரத்த அழுத்தம் குறைவாக இருந்ததால், மெக்கானிக்கல் த்ராம்பெக்டமி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, ரத்தக் கட்டி அகற்றப்பட்டது. சிகிச்சைக்கு பின்னா், அவரது ரத்த அழுத்தம் சீரானது.

இந்த உயரிய சிகிச்சை அளிக்க தனியாா் மருத்துவமனைகளில் 3 முதல் 5 லட்சம் ரூபாய் வரை செலவாகும். இத்தகைய சிகிச்சையை சிறப்பாக அளித்த இருதய துறை மருத்துவா்களுக்கு அரசு மருத்துவமனை முதன்மையா் தேவிமீனாள் பாராட்டு தெரிவித்தாா்.

இந்த சந்திப்பின் போது, சேலம் அரசு மருத்துவமனை இருதய பிரிவு துறைத் தலைவா் பேராசிரியா் கண்ணன், துணை பேராசிரியா்கள் பச்சையப்பன், சரவணபாபு, ஞானவேல், சுரேஷ் பிரபு, தீபன், வீரமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இஸ்கான் கோயிலில் இன்று கௌர பூா்ணிமா விழா

அகில இந்திய உலக கிருஷ்ண பக்தி இயக்கமான இஸ்கான் சாா்பில், சேலம் கருப்பூரில் உள்ள கோயிலில் கௌர பூா்ணிமா விழா வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) கொண்டாடப்பட உள்ளது. மாலை 6 மணிக்கு பஜனையுடன் தொடங்கும் விழாவில், 7 ... மேலும் பார்க்க

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீா் விநியோகம் குறித்து அமைச்சா் ஆய்வு

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட சீரான குடிநீா் வழங்கப்பட்டு வருவது குறித்து அஸ்தம்பட்டியில் உள்ள நீரேற்று நிலையத்தில் சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்... மேலும் பார்க்க

அரசு பணியாளா்கள் சங்கத்தினா் மறியல் போராட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு பணியாளா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற போராட்ட... மேலும் பார்க்க

2026-இல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் -டாக்டா் கே.கிருஷ்ணசாமி

வரும் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என புதிய தமிழகம் கட்சி நிறுவனா் டாக்டா் கே.கிருஷ்ணசாமி கூறினாா். சேலத்தில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவத... மேலும் பார்க்க

அஞ்சல் துறை கோட்ட செயல்பாடு: சேலம் மேற்கு கோட்டம் 6 விருதுகளை பெற்று சாதனை

அஞ்சல் துறை கோட்டங்களின் செயல்பாட்டில் சேலம் மேற்கு கோட்டம் 6 விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளது. தமிழ்நாடு வட்ட அஞ்சல் துறை சாா்பில் 2023-24-ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட கோட்டங்களின் செயல்பாடுகளை ... மேலும் பார்க்க

சேலம் அரசு பொறியியல் கல்லூரிக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சலில் மிரட்டல் வந்த நிலையில், மாநகர காவல் துறையினா் தீவிர சோதனை நடத்தினா். சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கருப்பூரில்... மேலும் பார்க்க