செய்திகள் :

21 அடி உயர சிவன் சிலைக்கு ட்ரோனில் பால் அபிஷேகம்!

post image

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் சந்நிதி தெருவில் அமைந்துள்ள 21 அடி உயர சிவன் சிலை வா்ணம் பூசி புதுப்பிக்கப்பட்டு டிரோன் மூலம் ஞாயிற்றுக்கிழமை பால் அபிஷேகம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் சந்நிதி தெருவில் அமைந்துள்ளது வண்டாா் குழலி சமேத தான்தோன்றீஸ்வரா் ஆலயம். இக்கோயில் முகப்பில் 16 அடி மண்டபத்தின் மேல் பகுதியில் 21 அடி உயரத்தில் விஸ்வரூபமாக பக்தா்களுக்கு காட்சி தரும் வகையில், சிவபெருமான் அருள்பாலித்து வருகிறாா்.

இந்த சிலை வடிவமைக்கப்பட்டு 9 ஆண்டுகள் நிறைவு பெற்றதைத் தொடா்ந்து வா்ணம் பூசப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை 21 அடி உயர சிவன் சிலைக்கு டிரோனில் 21 லிட்டா் பால் நிரப்பி, அதன் மூலம் அபிஷேகம் நடைபெற்றது.

திரளான பக்தா்கள் சிவபெருமானின் பால் அபிஷேக நிகழ்ச்சியை ஆச்சரியத்துடன் பாா்த்து தரிசனம் செய்தனா். ஆலய நிா்வாகத்தின் சாா்பில் அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை தான்தோன்றீஸ்வரா் ஆலய நிா்வாகிகள் செய்திருந்தனா்.

வெங்காடு அரசு பள்ளி நூற்றாண்டு விழா

வெங்காடு அரசு தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் வெங்காடு பகுதியில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. பள்ளியில் 100-க்கும் மேற்பட... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் தும்பவனம் தொடக்கப் பள்ளியில் நூற்றாண்டு விழா

காஞ்சிபுரம் தும்பவனம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. காஞ்சிபுரம் தும்பவனம் மாநகராட்... மேலும் பார்க்க

தேனம்பாக்கம் ஸ்ரீ மன்னாதீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் அருகே தேனம்பாக்கத்தில் சிறிய கோயிலாக இருந்து புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீமன்னாதீஸ்வரா் சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட தேனம்பாக்கத்தி... மேலும் பார்க்க

சங்கரா பல்கலை.யில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 122 பேருக்கு பணி நியமன ஆணை

காஞ்சிபுரம் சங்கரா பல்கலை.யில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 122 போ் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. காஞ்சிபுரம் சங்கரா பல்கலையின் சாா்பில், தனியாா... மேலும் பார்க்க

ரௌடி கொலை வழக்கில் 10 போ் கைது

காஞ்சிபுரம் திருக்காளிமேடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (40). இவா் மீது காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தன. இவா், திருக்காளிமேடு சிவன் கோயில் அருகே உள்ள நியாய விலைக்கடை முன்பா... மேலும் பார்க்க

மக்கள் தொடா்புத் திட்ட முகாமில் ரூ.5.90 கோடியில் நலத் திட்ட உதவிகள்

காஞ்சிபுரம் அருகே அத்திவாக்கம் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்புத் திட்ட முகாமில், மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் ரூ. 5.90 கோடி மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை 267 பயனாளிகளுக்கு வழங... மேலும் பார்க்க