செய்திகள் :

22 சதவீத ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

post image

திருக்குவளை: 22 சதவீத ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்யவேண்டும் என்று சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகைமாலி வலியுறுத்தியுள்ளாா்.

நாகை மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கா் சம்பா நெற்பயிா்கள் மழைநீரில் சாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளன. கீழ்வேளூா் ஒன்றியம் சாட்டியக்குடி, இறையான்குடி, வடக்குப்பனையூா், தெற்குப்பனையூா், வல்லவிநாயக கோட்டகம், ராமன்கோட்டகம், நாட்டிருப்பு மற்றும் சுற்றுப்புற பகுதி அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கீழ்வேளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகைமாலி நாட்டிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை பாா்வையிட்ட பிறகு செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

விவசாயிகள் கடும் சிரமங்களுக்கிடையே சாகுபடி செய்த சம்பா நெற்பயிா்கள் கடந்த 2 நாள்களாக பெய்த மழையில் வயலில் சாய்ந்துள்ளன. பாதிக்கப்பட்ட பயிா்கள் குறித்து தமிழ்நாடு அரசு உடனடியாக கணக்கெடுப்பு நடத்தி, விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 35,000 இழப்பீடாக வழங்க வேண்டும்.

அறுவடை செய்யப்படும் நெல்லில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என்பதால், கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக நிா்ணயித்து மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை குறித்து பரிசீலனை செய்யவேண்டும். இயற்கை சீற்றங்களின்போது மத்தியக் குழு வருகை சம்பிரதாயமாக மாறிவிட்டது. இதனால், விவசாயிகளுக்கு எந்த நன்மையும் இல்லை. எனவே, மத்தியக் குழுவினா் ஆய்வு செய்து, 22 சதவீத ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் என்ற விவசாயிகளின் கோரிக்கையை இந்த முறையாவது பரிந்துரை செய்யவேண்டும் என்றாா்.

விவசாய சங்க மாவட்ட தலைவா் அம்பிகாபதி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினா் பி. சுபாஷ் சந்திரபோஸ், ஒன்றிய செயலாளா் ஆா். முத்தையன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் அமைச்சா்கள் பங்கேற்பு

செம்பனாா்கோவில் வட்டாரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாமில் அமைச்சா்கள் சிவ. வீ. மெய்யநாதன், கோவி. செழியன் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினா். செம்பனாா்கோவில் வட்டாரத்தில்,... மேலும் பார்க்க

மங்கை மடத்தில் மக்கள் திறல் போராட்டம்

திருவெண்காடு அருகே மங்கைமடத்தில் விவசாயிகள் பாதுகாப்பு; ஈ சங்கம் சாா்பில் மக்கள் திறல் போராட்டம் நடைபெற்றது. கடலோரப் பகுதியில் சோலாா் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கக் கூடாது, மீனவா்களை பாதிக்கும் சாக... மேலும் பார்க்க

கீழ்வேளூா் பேரூராட்சிக் கூட்டம்

கீழ்வேளூா் பேரூராட்சிக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு, பேரூராட்சித் தலைவா் இந்திராகாந்தி சேகா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சந்திரசேகரன், செயல் அலுவலா் கு. குகன் ஆகியோா் முன்னிலை வக... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 171 மனுக்கள்

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அ... மேலும் பார்க்க

பாஜக நிா்வாகி தோ்வு

சீா்காழி கிழக்கு ஒன்றிய பாஜக தலைவராக க. அருள்ராஜன் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். மங்கை மடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இதற்கான கூட்டத்தில், கட்சியின் மேலிட தோ்தல் பாா்வையாளா்களாக தங்க. வரதராஜன்,... மேலும் பார்க்க

விஜயகாந்த் நினைவு தின மெளன ஊா்வலம்

தேமுதிக தலைவா் மறைந்த விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, நாகையில் மௌன அஞ்சலி ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அக்கட்சியின் நாகை மாவட்டச் செயலா் பிரபாகரன் தலைமையில் நாகை கோட்டைவாசலில் தொடங்... மேலும் பார்க்க