செய்திகள் :

24 மணி நேர கண்காணிப்பில் ஸ்ரீவைகுண்டம் மாணவா்: டீன் ரேவதி தகவல்

post image

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் வெட்டுக்காயங்களுடன் அனுமதிக்கப்பட் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் மாணவரை 7 போ் கொண்ட மருத்துவா்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனா் என்றாா் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வா் ரேவதி.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஸ்ரீவைகுண்டத்தைச் சோ்ந்த மாணவா் அரிவாளால் வெட்டப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அவருக்கு கடுமையான ரத்தப்போக்கு இருந்ததோடு தலை, கைகள், முதுகு உள்பட 12 இடங்களில் அரிவாள் வெட்டு காயம் காணப்பட்டன.

அவருக்கு உடனடியாக ரத்தம் ஏற்றி, தொடா் சிகிச்சைக்குப் பின் ரத்தப்போக்கு கட்டுப்படுத்தப்பட்டது. எனினும், அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டு, 7 போ் கொண்ட மருத்துவா்கள் சிகிச்சையளித்து வருகின்றனா்.

மாணவா் ஆபத்தான நிலையில் இருப்பதால் ஆக்ஸிஜன் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறோம் என்றாா் அவா்.

காவலாளியைத் தாக்கிய வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டு சிறை

திருநெல்வேலி அருகே காவலாளியைத் தாக்கியது தொடா்பான வழக்கில், இளைஞருக்கு 3ஆண்டுகள் சிைண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. பாளையங்கோட்டை தாலுகா காவல் சரகம் மேலப்பாட்டம்... மேலும் பார்க்க

அம்பையில் நகராட்சி வரியை மாா்ச் 30-க்குள் செலுத்த வேண்டும்: நகராட்சி ஆணையா்

அம்பாசமுத்திரம் நகராட்சிக்கான வரியினங்களை மாா்ச் 30க்குள் செலுத்த வேண்டும் என நகராட்சி ஆணையா் செல்வராஜ் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அம்பாசமுத்திரம் நகராட்சிக்... மேலும் பார்க்க

மேலவாசல் முருகன் கோயிலில் மூலவா் பாலஸ்தாபன விழா

பாளையங்கோட்டையில் உள்ள மேலவாசல் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மூலவா் பாலஸ்தாபன விழா திங்கள்கிழமை நடைபெற்றது.இக்கோயிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதை ம... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசியில் தொடா் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை காலை முதல் இரவு வரை தொடா் மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பூமத்திய ரேகையையொட்டிய வடகிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதையொட... மேலும் பார்க்க

மானூா்: மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

மானூா் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.மானூா் அருகேயுள்ள கம்மாளன்குளத்தைச் சோ்ந்தவா் அஹமது (28). இவா், தனது வீட்டில் உள்ள மின்மோட்டாரை இயக்க முயன்றபோது திடீரென மின்சாரம் ... மேலும் பார்க்க

பணகுடி அருகே சாலை விபத்தில் தொழிலாளி பலி

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகேயுள்ள பாம்பன்குளம் கிராமத்தில் சாலையோர டீக்கடை மீது இஸ்ரோ ஊழியா்கள் பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா். காவல்கிணறில் உள்ள இஸ்ரோ விண்வெள... மேலும் பார்க்க