செய்திகள் :

``24 முறை... இது நாட்டுக்கு அவமானம்" - மநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே!

post image

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தொடரின் இரு அவைகளிலும் பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூர், இந்திய விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு, ஏர் இந்தியா விமான விபத்து, பீகாரின் சிறப்பு வாக்காளர் திருத்தம் உள்ளிட்ட விவகாரங்கள் விவாதிக்கப்படும் எனக் கூறப்பட்டது. இந்த நிலையில், மாநிலங்களவையில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மத்தியஸ்தம் செய்ததாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.

மல்லிகார்ஜுன கார்கே

அவரின் உரையில், ``பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விதி 267-ன் கீழ் நான் நோட்டீஸ் அளித்துள்ளேன். இன்று வரை, தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பயங்கரவாதிகளும் பிடிபட இல்லை. ஆனால், இந்தியாவின் அனைத்து தரப்பினரும் அரசுக்கு இந்தப் போர் விவகாரத்தில் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ளனர். என்ன நடந்தது என்பது குறித்து அரசு தெளிவாக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

இது தவிர, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அறிக்கை குறித்த தனது நிலைப்பாட்டையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும். ஏனெனில் அவர் ஒரு முறை அல்ல, 24 முறை போரை நிறுத்தியதாக பேசியிருக்கிறார். இது நாட்டிற்கு அவமானகரமானது" என்றார்.

கார்கேவின் கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா, ``ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்திற்கு மத்திய அரசு தயாராக உள்ளது." என்றார். இருப்பினும், கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில், அவை ஒத்திவைக்கப்பட்டது.

Dharmasthala mass burial: சிதைக்கப்பட்டு புதைக்கப்பட்ட 100+ பெண்கள்? - அதிரவைக்கும் குற்றச்சாட்டு!

கர்நாடக மாநிலம் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோயில் வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண் சடலங்கள் புதைக்கட்டிருப்பதாக அந்தக் கோயில் முன்னாள் ஊழியர் கொடுத்துள்ள குற்றச்சாட்டு கர்நாடகத்தை மட்டுமல்லாது ஒட்டுமொத்த... மேலும் பார்க்க

'முதலாளித்துவ, சாதிய இருண்ட காலத்தை போராட்டத்தால் சரிசெய்தார் அச்சுதானந்தன்' - பினராயி உருக்கம்!

கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான வி.எஸ்.அச்சுதானந்தன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று மாலை மரணமடைந்தார். அவரது இறுதிச்சடங்கு புதன்கிழமை நடக்க உள்ளது. வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவை ஒட்டி... மேலும் பார்க்க

Monsoon session: நிதி, கல்வி, ஸ்போர்ட்ஸ்... மத்திய அரசு கொண்டு வரும் 15 மசோதாக்களின் முழு பட்டியல்!

இந்த ஆண்டின் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 21) தொடங்கியது.ஆகஸ்ட் 21 வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில், ஆபரேஷன் சிந்தூர், பீகாரில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை, கீழடி ஆய்வறிக்கை உள்ளிட... மேலும் பார்க்க

கீழடி குறித்த கேள்விக்கு மக்களவையில் பதிலளித்த மத்திய அமைச்சர்- என்ன கூறினார்?

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 21) தொடங்கியது. இந்தக் கூட்டம் தொடங்குவதற்கு முன் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட தி.மு.க எம்.பி டி.ஆர். பாலு, கீழடி அகழாய்வு ஆய்வற... மேலும் பார்க்க

சி.பி.எம் ஸ்தாபகர்; தொழிலாளர்களின் தோழன்... கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் காலமானார்!

கேரள மாநில முன்னாள் முதலமைச்சரும் சி.பி.எம் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் இன்று காலமானார். அவருக்கு வயது 101. உடல்நலக்குறைவு காரணமாக திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்ச... மேலும் பார்க்க

`ஆட்சி நம்மிடம் இருந்தாலும் அதிகாரம் ஆளுநரிடம் இருக்கிறது!’ - வெடித்த முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமி கலந்து கொண்டு பேசுகையில், ``தேசிய ஜனநாய... மேலும் பார்க்க