செய்திகள் :

27 வயதிலேயே கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார் புக்கோவ்ஸ்கி! பந்து தாக்கியதில் நிலைகுலைந்தவர்!

post image

கிரிக்கெட் போட்டியின் போது பந்து தாக்கியதில் நிலைகுலைந்த ஆஸ்திரேலிய அணி வீரர் வில் புக்கோவ்ஸ்கி, மூளையதிர்ச்சி காரணமாக தொடர்ந்து விளையாட முடியாத நிலையில் கிரிக்கெட்டில் இருந்து நிரந்தரமாக விடைபெற்றார்.

ஆஸ்திரேலியாவில் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிவந்த வில் புக்கோவ்ஸ்கி ஆஸ்திரேலிய அணியின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்பட்டார்.

விக்டோரியா அணிக்காக 2 இரட்டை சதங்கள் அடித்ததால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் அணியில் புகோவ்ஸ்கி தேர்வு செய்யப்பட்டார். வில் புக்கோவ்ஸ்கி 2021 ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் அறிமுகமானார்.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தின்போது, இந்திய வீரர் கார்த்திக் தியாகி வீசிய பந்து வில் புக்கோவ்ஸ்கி தலையில் பயங்கரமாக தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவர் மைதானத்தில் அப்படியே நிலைகுலைந்தார். இதையடுத்து அவருக்கு ஒன்பது கட்டங்களாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில் கடந்தாண்டு மார்ச் மாதத்தில் ஷெஃபீல்ட் ஷீல்ட் தொடரில் மெரிடித் வீசிய பந்து வில் புக்கோவ்ஸ்கியின் தலையில் மீண்டும் தாக்கியது. இதில், பலத்த காயமடைந்தார். இதனால், மிகவும் பாதிக்கப்பட்ட வில் புக்கோவ்ஸ்கி பல்வேறு மருத்துவர்களின் ஆலோசனைபடி நிரந்தரமாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

இதுபற்றி 27 வயதான வில் புக்கோவ்ஸ்கி கூறுகையில், “பந்து தாக்கியதற்கு பின்னர் நடப்பதற்குகூட மிகவும் சிரமமாக இருந்தது. இதற்குபிறகு கிரிக்கெட்டில் இருந்து விளையாடுவதற்கு வாய்ப்பே இல்லை. இதனால், நான் தூங்கிக்கொண்டுதான் இருந்தேன்” என்றார்.

விக்டோரியா அணிக்காக 36 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள வில் புகோவ்ஸ்கி 45.19 சராசரியுடன் 7 சதங்கள் உள்பட 2,350 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 255* ரன்கள் குவித்துள்ளார். 2017 ஆம் ஆண்டில் தனது முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகமான வில், ஆஸ்திரேலியாவில் பிரபலமான பிக் பாஷ் லீக்கில் விளையாடியிருந்தாலும், இதுவரை சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியதில்லை.

இதையும் படிக்க: ரசிகர்களுடன் அடிதடி: பாகிஸ்தான் வீரரை தரதரவென இழுத்துச் சென்ற பாதுகாவலர்!

இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் நீக்கம்!

இந்திய கிரிக்கெட் அணியின் உதவிப் பயிற்சியாளராக உள்ள மும்பையைச் சேர்ந்த அபிஷேக் நாயர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அதேபோல், பந்துவீச்சுப் பயிற்சியாளர் திலீப் மற்றும் உதவிப் பணியாளர் சோஹம்... மேலும் பார்க்க

46 வயதில் தந்தையான ஜாகீர் கான்! குவியும் வாழ்த்துகள்!

முன்னாள் இந்திய வீரரும் லக்னௌ அணியின் ஆலோசகருமான ஜாகீர் கான், அவரது மனைவி சஹாரிகாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இடதுகை வேகப் பந்துவீச்சாளரான ஜாகீர் கான் 2017இல் ஓய்வு பெற்றார். பிறகு மும்பை இந்தியன்... மேலும் பார்க்க

ஒலிம்பிக்ஸ் 2028: கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் இடம் அறிவிப்பு!

அமெரிக்காவில் நடைபெறும் 2028 ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட் போட்டிகளுக்கான இடம் அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் 2028ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்ஸுக்கு 6 கிரிக்கெட் அணிகள் மட்டுமே அனுமதிக... மேலும் பார்க்க

முதல் முறையாக டி20 தொடருக்காக வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!

இருதரப்பு தொடருக்காக பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.இந்திய அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட த... மேலும் பார்க்க

ஐசிசியின் சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர்!

ஐசிசியின் மார்ச் மாத சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெற்றுள்ளார்.சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் வீரர்களுக்கு ஐசிசியின் சார்பில் விருது வழங்கப்பட்ட... மேலும் பார்க்க

பாஜகவில் இணைந்தார் இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் கேதர் ஜாதவ்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கேதர் ஜாதவ் பாஜகவில் இணைந்தார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான கேதர் ஜாதவ் ஐபிஎல் சென்னை, பெங்களூரு அணிகளுக்கு விளையாடியதன் மூலம் மிகவும் புகழ்பெற்றவர். சர்... மேலும் பார்க்க