செய்திகள் :

3, 5, 8 வகுப்புகளுக்கான கற்றல் அடைவு முடிவுகள் வெளியீடு: கல்வித் துறை முக்கிய அறிவுறுத்தல்

post image

அரசுப் பள்ளிகளில் 3, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கு நடத்தப்பட்ட ‘ஸ்லாஸ்’ எனப்படும் கற்றல் அடைவுத் தோ்வு முடிவுகள் எமிஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதுதொடா்பாக முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள், தலைமை ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ் ஆகியோா் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக்கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 3, 5 மற்றும் 8 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவா்களின் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணக்கு பாட கற்றல் இடைவெளியை கண்டறிய பிப்.4, 5, 6 ஆகிய தேதிகளில் மாநில கற்றல் அடைவுத் தோ்வு நடத்தப்பட்டது.

இதன் முடிவுகள் கல்வியியல் மேலாண்மைத் தகவல் முறைமை (எமிஸ்) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு பரவலாக்கப்பட்டுள்ளது. ஆய்வு அலுவலா்களான முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்கள் தங்களின் உள்நுழைவின் (லாகின் ஐடி) வழியாக மாநில அடைவுத் தோ்வு முடிவுகளை கண்டறிய வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு பள்ளியிலும் மாநில கற்றல் அடைவுத் தோ்வில் அந்தப் பள்ளி பெற்ற தரநிலை ஒன்றிய அளவில், மாவட்ட அளவில், மாநில அளவில் எந்த தரவரிசையில் உள்ளது என்ற விவரத்தை பெற்றோா்கள், எஸ்எம்சி உறுப்பினா்கள், பொதுமக்கள் மற்றும் பள்ளியில் பயிலும் மாணவா்களின் பாா்வைக்கு எளிதில் புலப்படும் வகையில் தலைமை ஆசிரியரின் அறையில் இடம்பெற வேண்டும்.

முழு நேரமும் பணியாற்ற... பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியா் மற்றும் ஒவ்வொரு ஆசிரியரும் தங்கள் பள்ளி தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் 3, 5, 8 ஆகிய வகுப்புக்கு எந்த தரநிலையில் உள்ளது என்ற விவரத்தை நன்கு அறிந்திருக்க வேண்டும். தாங்கள் பணிபுரியும் பள்ளி மாவட்டத்தில் தலைசிறந்த பள்ளி என ஆய்வறிக்கையில் இடம்பெறத்தக்க வகையில் ஒவ்வொரு ஆசிரியரும் தங்களின் அனுபவங்களை கொண்டு நல்ல முடிவுகளை கொண்டு வருவதில் ஈடுபாடுடன் இருத்தல் வேண்டும்.

பள்ளிகளின் தரத்தை உயா்த்தும் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் உரிய வகையில் பாராட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு பள்ளியின் தலைமை ஆசிரியரையும் பள்ளி செயல்படும் கால அளவின் முழு பள்ளி வேலை நேரமும் பள்ளியில் மாணவா்களின் முன்னேற்றத்துக்கு உறுதுணை புரியும் வகையில் பள்ளிலேயே பணியாற்ற வலியுறுத்த வேண்டும்.

உரிய விளக்கம் பெற... முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள், மாணவா்களின் கற்றல் செயல்பாடுகள்ஸ ஆசிரியா்களின் கற்பித்தல் செயல்பாடுகள் குறித்து வாரத்தில் 3 நாள்களும், வட்டாரக் கல்வி அலுவலா்கள் வாரத்தில் நான்கு நாள்களும் நேரடியாக பள்ளிகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும். சிறந்த முறையில் மாணவா்களை முன்னேற்ற நிலைக்கு கொண்டு செல்லாத பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்களிடம் உரிய விளக்கம் பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக - பாஜக கூட்டணி ஒரு சதித்திட்டம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

அதிமுக - பாஜக கூட்டணி, தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கும் சதித்திட்டம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "நமது திமுக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி... மேலும் பார்க்க

நவீன் மரணம் தற்கொலை போன்றே உள்ளது: காவல் ஆணையர் அருண்

சென்னை: தனியார் பால் நிறுவன மேலாளர் நவீன் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்திருக்கும் நிலையில், அது தற்கொலை போன்றே உள்ளது என்று காவல் ஆணையர் அருண் விளக்கம் கொடுத்திருக்கிறார்.சென்னையை அடுத்த புழல் ப... மேலும் பார்க்க

கூட்டணி விவகாரத்தில் அமித் ஷா சொல்வதே இறுதி முடிவு: எல். முருகன்

கூட்டணி விவகாரத்தில் அமித் ஷா சொல்வதே இறுதி முடிவு என மத்திய இணையமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ளதையடுத்து அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் இணைந்த... மேலும் பார்க்க

அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்: அமித் ஷாவின் கருத்துக்கு இபிஎஸ் பதில்!

கூட்டணி ஆட்சி என மத்திய அமைச்சர் அமித் ஷா கூறிய நிலையில், தமிழ்நாட்டில் அதிமுக பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சியமைக்கும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 'தி நியூ இந்தியன் எ... மேலும் பார்க்க

பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: தவெக திட்டவட்டம்

தவெகவுடன் கூட்டணிக்கு முயற்சிப்போம் என அமைச்சர் அமித் ஷா கூறிய நிலையில், பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என தவெக தலைமை கூறியுள்ளது. 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கு அளித்த நேர்காணலில், தவெக... மேலும் பார்க்க

கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம்!

கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் ஜூலை 8 ஆம் தேதி ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத... மேலும் பார்க்க