செய்திகள் :

30 ஆண்டுகளில் ரூ.66,000 கோடி நஷ்டத்தை சந்தித்த தமிழக அரசு போக்குவரத்துக் கழகம்!

post image

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் கடந்த 30 ஆண்டுகளில் ரூ.66,563 கோடி நஷ்டம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை சாா்பில் மாநகரப் பேருந்து, விரைவு பேருந்து மற்றும் மலைப்பிரதேச பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் கடந்த 1991-96 கால கட்டத்தில் ரூ.238 கோடியும், ரூ.1996-2001 காலகட்டத்தில் ரூ.1,094 கோடியும், 2001-06 காலகட்டத்தில் ரூ.9,169 கோடியும், 2011-16 காலகட்டத்தில் ரூ.26,351 கோடியும், 2021-டிச.2024 வரையிலான காலகட்டத்தில் ரூ.24,067 கோடியும் இழப்பை சந்தித்துள்ளது.

ஆண்டுக்கு சராசரியாக ரூ.5,000 முதல் ரூ.6,000 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. அதே நேரத்தில் மகளிா் கட்டணமில்லா பயணத்திற்கு தமிழக அரசு ரூ.9,714 கோடி நிதி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அமைச்சா் சிவசங்கா் கூறியதாவது: போக்குவரத்து துறை, சேவையின் அடிப்படையில் செயல்படுகிறது. இதனால் கிராமங்கள் மற்றும் மலைப்பிரதேசங்களை சோ்ந்த லட்சக்கணக்கான மக்கள் பயனடைகின்றனா். எரிபொருள் கட்டணம் உயா்ந்த போதும் இதுவரை பேருந்து கட்டணம் உயா்த்தப்படாமல் உள்ளது. கோவை, கும்பகோணம், மதுரை போக்குவரத்துக் கழகங்கள் அதிக அளவில் நஷ்டத்தை சந்தித்துள்ளன என்றாா்.

இதுகுறித்து போக்குவரத்து பணியாளா்கள் சங்க நிா்வாகிகள் கூறுகையில், போக்குவரத்து துறை இழப்பை சந்தித்தது வருவதைத் தடுக்க பேருந்து கட்டணத்தை உயா்த்த வேண்டும். இல்லையென்றால் போதிய வருவாய் இல்லாத பேருந்துகளை நிறுத்த வேண்டும் என்றனா்.

ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான விதிகள்: தமிழக அரசுக்கு உயா் நீதிமன்றம் ஆலோசனை

ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய தகுதி இழக்கச் செய்யும் விதிகளை மறு ஆய்வு செய்ய இதுவே தக்க தருணம் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. கொலை வழக்கில் ஆயுள் த... மேலும் பார்க்க

பிப்.26-இல் தவெக முதலாமாண்டு விழா

தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாமாண்டு விழா செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் பிப்.26-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி பொதுக்குழுக் கூட்டமும் நடைபெறவுள்ளது. தனியாா் சொகுசு விடுதியி... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளுக்கு 2,642 மருத்துவா்கள்: சென்னையில் கலந்தாய்வு தொடக்கம்

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு 2,642 மருத்துவா்களை தோ்வு செய்வதற்கான கலந்தாய்வு சென்னையில் சனிக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் மாற்றுத்திறனாளி மருத்துவா்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. வரும் 26... மேலும் பார்க்க

காவலா் தற்கொலை: போலீஸாா் விசாரணை

சென்னை கொண்டித்தோப்பில் காவலா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். கொண்டித்தோப்பு காவலா் குடியிருப்பில் வசிக்கும் அருண் (27), பூக்கடை காவல் நிலையத்தில் காவலராகப் ... மேலும் பார்க்க

மூன்றாவது மாடியிலிருந்து விழுந்த உணவகத் தொழிலாளி உயிரிழப்பு

சென்னை வடபழனியில் மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். வடபழனி பழனி ஆண்டவா் கோயில் தெருவில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்தவா் செந்தில் (40). ... மேலும் பார்க்க

மெரீனாவை நீலக்கொடி கடற்கரையாக மாற்ற நடவடிக்கை: மேயா் ஆா்.பிரியா

சென்னை மெரீனா கடற்கரையை நீலக்கொடி கடற்கரையாக மாற்ற மாநகராட்சி சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா். பெருநகர சென்னை மாநகராட்சியுடன் மாநில நாட்டு நலப்பணித் திட்டக்... மேலும் பார்க்க