செய்திகள் :

30 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்த வங்கதேசத் தம்பதி, 22 வயது மகன் கைது!

post image

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளாக இந்தியாவில் சட்டவிரோதமாகக் குடியேறி வசித்த வங்கதேசத் தம்பதி மற்றும் அவர்களது 22 வயது மகன் ஆகியோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் 24 அன்று ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் நவி மும்பையின் ஜுஹுகவோன் பகுதியில் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறியவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்குள்ள குடியிருப்பு கட்டடத்தில் வாழ்ந்து வந்த ஷாரோ அப்தாப் ஷெயிக் (வயது 48) மற்றும் அவரது மனைவியான சல்மா சரோ ஷெயிக் (39) ஆகியோர் காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, அவர்கள் வைத்திருந்த ஆவணங்கள் சோதனைச் செய்யப்பட்டது. அப்போது, அவர்கள் தங்கியிருந்த வீட்டின் உரிமைப் பத்திரம், ஆதார் அட்டை, பான் அட்டை, இந்திய கடவுச்சீட்டு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை மற்றும் பிறப்பு சான்றிதழ்கள் ஆகியவை அவர்கள் சமர்பித்ததினால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இதையும் படிக்க:‘கோ பேக் கவர்னர்’: உ.பி. பேரவையில் எதிர்க்கட்சிகள் முழக்கம்!

இருப்பினும், அவர்கள் வழங்கிய ஆவணங்களை சரிபார்த்தபோது அவர்கள் சமர்பித்த பிறப்புச் சான்றிதழ்கள் போலியானது என்பது கடந்த பிப். 2 அன்று சான்றிதழகள் வழங்கியதாகக் கூறப்பட்ட மருத்துவமனைக்கு சென்று விசாரித்தபோது கண்டறியப்பட்டது. ஆனால், அவர்களது 22 வயது மகன் இந்தியாவில் பிறந்தவர் எனக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அவர்கள் மூவர் மீதும் இந்திய வெளிநாட்டினர் சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடந்த பிப்.16 அன்று அவர்கள் கைது செய்யப்பட்டதாக அம்மாநில காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மீனவர்கள் விவகாரம்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழ... மேலும் பார்க்க

பிப். 25-ல் தமிழ்நாட்டுக்கு வரும் அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

வருகிற பிப். 25 ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு வருகைதரும் அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக கறுப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக காங்கிர... மேலும் பார்க்க

சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் மூத்த மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும்! - மனித உரிமைகள் ஆணையம்

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், பயிற்சி பெற்ற மூத்த மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 2019-ல் திருவண்ணாமலையைச் சேர்ந... மேலும் பார்க்க

திருமுல்லைவாயல் தனியார் ஆலையில் தீ விபத்து! அருகிலுள்ள பள்ளிக்கும் தீ பரவியது!

திருமுல்லைவாயலில் தின்னர் தயாரிக்கும் தனியார் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயலில் சுதர்சன் நகர் பகுதியில் வண்ணப்பூச்சுகளுக்கு பயன்படும் தின்னர் தயாரிக்கும் ஆலை இயங... மேலும் பார்க்க

உத்தரகண்ட்: வெளிமாநிலத்தவர் நிலம் வாங்குவதற்கு தடை!

புது தில்லி: பாஜக ஆளும் உத்தரகண்ட் மாநிலத்தில் 11 மாவட்டங்களில் வெளிமாநிலத்தவர் நிலம் வாங்க தடை விதிக்கும் புதிய சட்டத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்ற அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.உத்தரகண்ட்... மேலும் பார்க்க

கல்வி நிதி ரூ.2,152 கோடியை விடுவிக்கவும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையிலும், தமிழ்நாட்டின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின்கீழ் வரவேண்டிய ரூ. 2,152 கோடி நிதியினை உடனடியாக விடுவித்திட உரிய ந... மேலும் பார்க்க