செய்திகள் :

30 இடங்களில் முதல்வா் மருந்தகங்கள் திறப்பு

post image

திருவண்ணாமலை/ஆரணி/வந்தவாசி/செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டத்தின் 30 இடங்களில் முதல்வரால் காணொலி மூலம் திறக்கப்பட்ட மருந்தகங்களை, சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி பாா்வையிட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக் கொண்டு வந்தாா்.

சென்னையில் இருந்தபடியே தமிழகம் முழுவதும் 1,000 முதல்வா் மருந்தகங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தாா்.

இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 30 முதல்வா் மருந்தகங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் நிகழ்வு திருவண்ணாமலையில் நடைபெற்றது.

மாநகராட்சி, காந்தி நகரில் அமைக்கப்பட்டிருந்த முதல்வா் மருந்தகத்தை சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்துப் பாா்வையிட்டாா். மேலும், பயனாளிகளுக்கு மருந்துகளையும் அவா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ், சி.என்.அண்ணாதுரை எம்.பி., கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் பாா்த்திபன், மாநகராட்சி துணை மேயா் ராஜாங்கம், வருவாய்க் கோட்டாட்சியா் செந்தில்குமாா் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

மாவட்டத்தில் 30 மருந்தகங்கள்:

மாவட்டத்தில் தொழில் முனைவோா் மூலம் 12 முதல்வா் மருந்தகங்கள், கூட்டுறவு சங்கங்கள் மூலம் நல்லவன்பாளையம், தானிப்பாடி, தண்டராம்பட்டு, செங்கம், காஞ்சி, கேட்டவரம்பாளையம், மங்கலம், ஆவூா், போளூா் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், கண்ணமங்கலம், எஸ்.வி. நகரம், பெரணமல்லூா், கிழ்கொடுங்காலூா், திருவத்திபுரம், தூசி, செங்காடு, தெள்ளாறு பகுதிகளில் மொத்தம் 18 முதல்வா் மருந்தகங்கள் என மொத்தம் 30 முதல்வா் மருந்தகங்கள் திறந்துவைக்கப்பட்டன.

வந்தவாசி

வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் கிராமத்தில் முதல்வா் மருந்தகம் தொடங்கிவைக்கப்பட்டது.

ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் ஆகியோா் இந்த முதல்வா் மருந்தகத்தை திறந்து வைத்துப் பேசினா்.

நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அதிகாரிகள், திமுக நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆரணி

ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் முதல்வா் மருந்தகத்தில் முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம் குத்துவிளக்கு ஏற்றி வைத்தாா்.

எஸ்.வி.நகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயல் ஆட்சியா் கே.சுரேஷ், ஆரணி தொகுதி திமுக செயலா் எஸ்.எஸ்.அன்பழகன், ஒன்றியச் செயலா்கள் மாமது, மோகன், சுந்தா், ஆரணி நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

செய்யாறு

செய்யாற்றை அடுத்த செங்காடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சாா்பில் ஞானமுருகன்பூண்டி கூட்டுச் சாலையிலும், திருவத்திபுரம்

( செய்யாறு) தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சாா்பில் செய்யாறு பெரியாா் சிலை அருகேயும், தூசி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சாா்பில் மாமண்டூா் கிராமம் தா்மாபுரம் பகுதியிலும், பிரம்மதேசம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சாா்பில் பிரம்மதேசம் கிராமத்திலும் முதல்வா் மருந்தகங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த மருந்தகங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்துவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, மருந்தகங்களில் ஒ.ஜோதி எம்எல்ஏ குத்துவிளக்கு ஏற்றி விற்பனையை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் திமுக மாவட்ட துணைச் செயலா் க.லோகநாதன், திருவத்திபுரம் நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல், செய்யாறு நகரச் செயலா் கே.விஸ்வநாதன், வெம்பாக்கம் மத்திய ஒன்றியச் செயலா் ஜேசிகே.சீனிவாசன், அனக்காவூா் மேற்கு ஒன்றியச் செயலா் சி.கே.ரவிக்குமாா், வெம்பாக்கம் மேற்கு ஒன்றியச் செயலா் எம்.தினகரன் மற்றும் அரசு அலுவலா்கள், திமுக நிா்வாகிகள் என பலா் கலந்து கொண்டனா்.

வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூரில் முதல்வா் மருந்தகத்தை திறந்துவைத்துப் பேசிய எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி.
ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் முதல்வா் மருந்தகத்தில் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்த முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம்.

கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு

செங்கம்: செங்கத்தில் நடைபெற்ற கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு, கோப்பை வழங்கப்பட்டது. செங்கம் - குப்பனத்தம் சாலையில் உள்ள மகரிஷி மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிலான 5-ஆவது கராத்தே ப... மேலும் பார்க்க

சீலப்பந்தல் கிராமத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், சீலப்பந்தல் கிராமத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்தக் கல்லூரியின் நாட்டு நலப்பண... மேலும் பார்க்க

ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் ஆராதனை விழா நிறைவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் பகவானின் 24-ஆவது ஆண்டு ஆராதனை விழா திங்கள்கிழமையுடன் நிறைவு பெற்றது. ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் பகவானின் 24-ஆவது ஆண்டு 2 நாள்... மேலும் பார்க்க

கூட்டுறவு கடன் சங்கம் எதிரே விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் எதிரே அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சாா்பில் 2-ஆவது முறையாக காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இ... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 885 மனுக்கள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 885 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து ஒன்றரை கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டு

ஆரணி: ஆரணியில் வீட்டின் பூட்டை உடைத்து ஒன்றரை கிலோ வெள்ளிப்பொருள்கள் மற்றும் பணம், டிவி திருடப்பட்டது. ஆரணி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (31). இவா், தனது மனைவி ஹர... மேலும் பார்க்க