செய்திகள் :

360 நாட்டுக்கோழிப்பண்ணைகள் நிறுவும் திட்டம்!

post image

சென்னை: பப்பாளி, கொய்யா, எலுமிச்சை செடி தொகுப்பு 9 லட்சம் குடும்பங்களுக்கு 75 சதவிகிதத்தில் மானிய விலையில் வழங்கப்படும், 360 நாட்டுக்கோழிப்பண்ணைகள் நிறுவும் திட்டம் என வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சனிக்கிழமை(மார்ச்.15) தாக்கல் செய்தார்.

தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து,

2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சனிக்கிழமை (மார்ச் 15) தாக்கல் செய்து உரையாற்றினார்.

முன்னதாக, சென்னை மெரீனாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் அனைவரும் பச்சை துண்டு அணிந்து பங்கேற்றனர்.

வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உழவர்கள் பாதுகாக்கப்பட்டால் அவர்கள் மக்களை பாதுகாப்பார்கள் என்பதால் விவசாயத்துடன் உழவர்களின் நலனை மையப்படுத்தி வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

உழவர்களின் வாழ்வில் இந்த நிதிநிலை அறிக்கை வளர்ச்சியை கூட்டும் என்று நம்புகிறேன் என அமைச்சா் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில்,

9 லட்சம் குடும்பங்களுக்கு பழச்செடித் தொகுப்புகள்

2025-2026 ஆம் ஆண்டில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் என்னும் புதிய திட்டம் ரூ.125 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

9 லட்சம் குடும்பங்களுக்கு 75 சதவிகிதம் மானியத்தில் பழச்செடித் தொகுப்புகள் வழங்கப்படும்.

1 லட்சம் இல்லங்களுக்கு 17 சதவிகிதம் மானியத்தில், பயறுவகை விதைகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும்.

5 காளான் உற்பத்தி கூடங்கள் அமைத்திட மானியம் வழங்கப்படும்.

15 லட்சம் குடும்பங்களுக்கு காய்கறி விதைகள் தொகுப்புகள்

6 வகையான காய்கறிகள் விதைகள் அடங்கிய தொகுப்பு 15 லட்சம் குடும்பங்களுக்கு 75 சதவிகிதம் மானியத்தில் வழங்கப்படும்.

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் எனும் புதிய திட்டம் ரூ.125 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

360 நாட்டுக்கோழிப்பண்ணைகள் நிறுவும் திட்டம்

ஊரகப்பகுதியில் உள்ள ஏழை மகளிருக்கு நாட்டுக் கோழிப்பண்களை அமைப்பதற்கு ரூ.6 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

நன்னிலம் மகளிர் நிலவுடைமைத் திட்டம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பெண் விவசாயத் தொழிலாளர்களுக்கான நன்னிலம் மகளிர் நிலவுடைமைத் திட்டம் ரூ.20 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தல் லாரி உரிமையாளர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கும் திமுக அரசு?: அண்ணாமலை

கேரள எல்லை மாவட்டங்களில் ஓடும் கடத்தல் லாரிகளின் உரிமையாளர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கும் திமுக அரசு? என தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவா் தனது ‘எக்ஸ்’ வலை... மேலும் பார்க்க

மதுரை மத்திய சிறையில் 3 மணிநேரமாக போலீஸாா் அதிரடி சோதனை

மதுரை: மதுரை மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் அதிரடியாக 3 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனா்.மதுரை மத்திய சிறையில் 2500-க்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள... மேலும் பார்க்க

எழுத்தாளர் நாறும்பூநாதன் மறைவு: துணை முதல்வர் உதயநிதி இரங்கல்

எழுத்தாளர் நாறும்பூநாதன்(64) மறைவுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன்(64) ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) உயிரிழந... மேலும் பார்க்க

2-வது மொழியே கற்பிக்காத நிலையில் 3-வது மொழி வேறு: ப. சிதம்பரம் விமர்சனம்

பல மாநிலங்களில் இரண்டாவது மொழியான ஆங்கிலத்தையே கற்பிக்க முயலாத நிலையில், இதில் மூன்றாவது மொழி வேறு என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அம... மேலும் பார்க்க

எழுத்தாளர் நாறும்பூநாதன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

எழுத்தாளர் நாறும்பூநாதன்(64) மறைவுக்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன்(64) ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1... மேலும் பார்க்க

தங்கத்தேர்கள் எப்போது பயன்பாட்டிற்கு வரும்?: அமைச்சர் சேகர்பாபு

இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ரூ.31 கோடியில் மதிப்பீட்டில் செய்யப்பட்டு வரும் 4 தங்கத் தேர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் பக்தர்களின் நேர்த்திக்கடனுக்காக பயன்பாட்டிற்கு வரும் என்று இந்து சமய அறநிலையத்த... மேலும் பார்க்க