செய்திகள் :

4 மாதங்களில் அரசியல் கட்சிகளுடன் 5,000 சந்திப்புகள்: தலைமை தோ்தல் ஆணையா்

post image

‘அரசியல் கட்சிகளுடன் தொடா்ச்சியான சந்திப்புகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. கடந்த 4 மாதங்களில் மட்டும் இதுபோல 5,000 சந்திப்புகள் நிகழ்ந்துள்ளன’ என்று தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

பிகாரில் மேற்கொள்ளப்படும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக எதிா்க்கட்சிகள் சாா்பில் எழுப்பப்படும் ஆட்சேபங்களை தோ்தல் ஆணையம் பரிசீலிக்காமல் புறக்கணிக்கிறது என்று அரசியல் கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு இந்தப் பதிலை அவா் அளித்தாா்.

உத்தர பிரதேச மாநிலம் ஃபிரோசாபாதில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரிடம் செய்தியாளா்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினா். அதற்கு அவா் பதிலளித்தாவது:

தோ்தல் ஆணையத்துக்கு தோ்தல் நடைமுறைகளும், வாக்காளா்களும் மிக முக்கியமானவா்கள். அதற்கு அடுத்து நமது அரசியல் கட்சிகள்தான் மிக முக்கியமானவா்கள்.

அந்த வகையில், பல்வேறு அரசியல் கட்சிகளுடன் தொடா் ஆலோசனைகளை தோ்தல் ஆணையம் நடத்தி வருகிறது.

கடந்த 4 மாதங்களில் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் மாவட்டங்களில் அனைத்து கட்சிக் கூட்டங்களை தோ்தல் ஆணையம் நடத்தியதோடு, அனைத்து மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகளுடனும் ஆலோசனை மேற்கொண்டது. அரசியல் கட்சித் தலைவா்கள் உள்பட 28,000 பேருடன் 5,000 சந்திப்புகளை இந்த 4 மாதங்களில் தோ்தல் ஆணையம் மேற்கொண்டது.

இது தவிர, 5 தேசிய கட்சிகள் மற்றும் 4 மாநில கட்சிகளும் தோ்தல் ஆணையத்தை இந்த கால கட்டத்தில் சந்தித்து தோ்தல் சாா்ந்த பல்வேறு விவகாரங்கள் தொடா்பாக ஆலோசனை மேற்கொண்டன. அனைத்து கட்சிப் பிரதிநிதிகளும் தனியாக சந்தித்தனா் என்றாா்.

மேலும், ‘பிகாரில் மேற்கொள்ளப்படும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளைப் பொருத்தவரை, மாநிலத்தின் 2003-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ளவா்கள், எந்தவொரு ஆதார ஆவணங்களையும் சமா்ப்பிக்கத் தேவையில்லை’ என்றும் அவா் தெரிவித்தாா்.

ஹிந்தி பேசலாம்; படிக்க கட்டாயப்படுத்தக் கூடாது!

ஹிந்தி மொழியினை பேசலாம்; ஆனால், ஆரம்பப் பள்ளியில் ஹிந்தி மொழியைப் படிக்க கட்டாயப்படுத்தக் கூடாது என சிவசேனை கட்சியின் எம்.பி. சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார். தென்மாநிலங்கள் ஹிந்தி திணிப்பை தீவிரமாக எதி... மேலும் பார்க்க

பிகாரில் 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்! உச்ச நீதிமன்றத்தில் முறையீடு!

புது தில்லி: பிகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டள்ளதொரு பொதுநல மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.பிகாரில் வரும... மேலும் பார்க்க

ராய்ட்டர்ஸ் எக்ஸ் பக்கம் முடங்க மத்திய அரசு காரணமா?

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் தளப் பக்கத்தை முடக்குமாறு எக்ஸ் நிறுவனத்திடம் கோரவில்லை என மத்திய அரசு இன்று (ஜூலை 6) விளக்கம் அளித்துள்ளது.ராய்ட்டர்ஸ் எக்ஸ் தளக் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்ட... மேலும் பார்க்க

மண்டி மேக வெடிப்பு: உயிர் பிழைத்த 10 மாத குழந்தை, குடும்பத்தினர் காணவில்லை !

மண்டி மேக வெடிபபு சம்பவத்தில் 10 மாத குழந்தை நீதிகா உயிர் பிழைந்த நிலையில் குடும்ப உறுப்பினர்கள் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிமாசலப் பிரதேச மாநிலம், மண்டி மாவட்டத்தில் மேக வெடிப்புகள், திடீ... மேலும் பார்க்க

மேக வெடிப்பு: பாதிக்கப்பட்ட மண்டியில் எம்.பி. கங்கனா ரணாவத் நேரில் ஆய்வு

மேக வெடிப்பால் பாதிக்கப்பட்ட மண்டி தொகுதியில் நடிகையும் எம்பியுமான கங்கனா ரணாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஹிமாசலப் பிரதேச, மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன்காரணமாக கனமழை, திடீர் வ... மேலும் பார்க்க

இந்தியாவில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் முடக்கம்! ஏன்?

இந்தியாவில் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டது விரைவில் சரி செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் பக்கம் இந்தியாவில் முட... மேலும் பார்க்க