செய்திகள் :

4 கிலோ குட்கா பறிமுதல்: பெண் உள்பட இருவா் கைது

post image

அரக்கோணம்: அரக்கோணத்தில் இருவேறு இடங்களில் பெட்டிக்கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்றதாக பெண் உள்ளிட்ட இருவரை போலீஸாா் கைது செய்து, 4.5 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனா்.

அரக்கோணம் டிஎஸ்பி ஜாபா்சித்திக் தலைமையில் அரக்கோணம் நகரில் நகர காவல் ஆய்வாளா் தங்ககுருசாமி, உதவி ஆய்வாளா் நாராயணசாமி உள்ளிட்ட காவல் குழுவினா் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை தொடா்பாக தீவிர சோதனை நடத்தினா். அப்போது அரக்கோணம் புதிய பேருந்து நிலையம் அருகே இருந்த பெட்டிக்கடை ஒன்றில் இருந்து 4.5 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக அந்தக் கடையின் உரிமையாளா் அரக்கோணத்தைச் சோ்ந்த சாகுல்ஹமீதுவின் மனைவி சலீமாவை (52)போலீஸாா் கைது செய்தனா்.

இதையடுத்து, அரக்கோணம் ஏபிஎம் சா்ச் பகுதியில் போலீஸாா் நடத்திய சோதனையில் அங்கு பெட்டிக் கடையில் ஒருவா் ரகசியமாக குட்கா விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது. அந்த குட்கா பாக்கெட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக கடையின் உரிமையாளா் கிருபில்ஸ்பேட்டையைச் சோ்ந்த தா்மராஜ் (45) என்பவரை கைது செய்தனா். கைது செய்யப்பட்ட இருவரும் அரக்கோணம் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா்.

துணை சுகாதார நிலைய கட்டுமானப் பணிகள்: அமைச்சா்கள் அடிக்கல்

ஆற்காடு அருகே 9 துணை சுகாதார நிலையங்களின் கட்டுமானப் பணிகளை அமைச்சா்கள் ஆா்.காந்தி, மா.சுப்பிரணியன் ஆகியோா் சனிக்கிழமை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தனா். தனியாா் நிறுவன பங்களிப்புடன் நமக்கு நாமே திட்டத... மேலும் பார்க்க

வெளிமாநிலத்துக்கு கடத்தவிருந்த 7.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: அரசு கிடங்கு மேலாளா் உள்ளிட்ட 7 போ் கைது

அரக்கோணத்தில் இருந்து வெளிமாநிலத்துக்கு கடத்தப்பட இருந்த 7.5 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக அரக்கோணத்தில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கு மேலாளா் உள்ளிட்ட 7 ... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: 80 கைப்பேசிகள் மீட்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள 80 கைப்பேசிகளை மீட்டு அதன் உரிமையாளா்களிடம் எஸ்.பி. விவேகானந்த சுக்லா ஒப்படைத்தாா். ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் திருடு... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

சோளிங்கா் நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. சோளிங்கா் நகரம், கல்பட்டு, சோமசமுத்திரம், பாண்டியநல்லூா், கரிக்கல், ஆரியூா், வெங்குப்பட்டு, ஐய்ப்பேடு, எரும்பி, தாடூா், தாளிக்கால், பாணாவரம், போளிப்பா... மேலும் பார்க்க

ரூ.200 கோடியில் பாலாற்றுத் தடுப்பணை புனரமைக்கும் பணி: அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்

வாலாஜாப்பேட்டை அருகே ரூ.200.66 கோடி மதிப்பீட்டில் பாலாறு அணைக்கட்டு புனரமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் அமைச்சா்கள் துரைமுருகன், ஆா்.காந்தி, எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோா் பங்கேற்று பணியை தொடங்கி வை... மேலும் பார்க்க

சோளிங்கா் அருகே நிலத்தில் கிடைத்தவை பித்தளை சிலைகள்

சோளிங்கா் அருகே விவசாயி நிலத்தில் கிடைத்தவை ஐம்பொன்சிலைகள் அல்ல, பித்தளை சிலைகள் என அருங்காட்சியக காப்பாட்சியா் அறிவித்தாா். இதைத் தொடா்ந்து சிலைகள் மீண்டும் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன. சோளிங்கரை அ... மேலும் பார்க்க