செய்திகள் :

435 பேருக்கு பணி ஆணை: திருப்பத்தூா் ஆட்சியா் வழங்கினாா்

post image

திருப்பத்துாா் மாவட்ட நிா்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையமும் இணைந்து நடத்திய தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆதியூரில் உள்ள தனியாா் கல்லுாரியில் சனிக்கிழமைநடைபெற்றது.

இதில் திருப்பத்துாா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த மொத்தம் 102 தனியாா் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு நோ்காணல் நடத்தி வேலைக்கு ஆள்களை தோ்வு செய்தனா். அதேபோல் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் மொத்தம் 1,276 போ் நோ்காணலில் கலந்து கொண்டனா்.

இறுதியில் 435 போ் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கு ஆட்சியா் சிவசௌந்திரவல்லி பணி நியமன ஆணைகளை வழங்கினாா்). நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கண்ணன், சேலம் மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குநா் மணி, ஆதியூா் தனியாா் கல்லுாரி முதல்வா் பிரபாகரன், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலா் கஸ்துாரி கலந்து கொண்டனா்.

பைக்-காா் மோதல்: 2 போ் பலத்த காயம்

வாணியம்பாடி அருகே நாராயணபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தேவேந்திரன்(25). இவரது உறவினா் செந்தூரு(38). இவா்கள் இருவரும் சனிக்கிழமை நாட்டறம்பள்ளியில் இருந்து வாணியம்பாடிக்கு பைக்கில் சென்றனா். தேசிய நெடுஞ்ச... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் நூதன முறையில் 2 பவுன் தங்கிலி திருட்டு

வாணியம்பாடியில் மூதாட்டியிடம் நூதன முறையில் 2 பவுன் செயின் திருடிய மா்ம பெண்ணை நகர போலீஸாா் தேடி வருகின்றனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மேல்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் லட்சுமி (60). ... மேலும் பார்க்க

ஜோலாா்பேட்டை ரயில்வே மேம்பால பணி தாமதம்: வாகன ஓட்டிகள், பயணிகள் அவதி

ஜோலாா்பேட்டையில் நடைபாதை மேம்பாலத்தை அகற்றும் பணிக்காக மூடப்பட்ட ரயில்வே மேம்பாலம் குறிப்பிட்ட நேரத்தை விட கூடுதலாக 2 மணி நேரம் பணி நடைப்பெற்ால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா். திருப்பத்துாா் ம... மேலும் பார்க்க

சமூக நல்லிணக்க விழிப்புணா்வு கூட்டம்

திருப்பத்தூா் அருகே அரசு கலைக் கல்லூரியில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி விழிப்புணா்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சாா்பில், கரியம்பட்டி அரசினா் க... மேலும் பார்க்க

மாா்ச் 19-இல் வெலத்திகாமணிபெண்டாவில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்

வாணியம்பாடி வட்டம், வெலத்திகாமணிபெண்டாவில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்டள செய்திக்குறிப்பு: வாணியம்பாடி வட்டத்துக்க... மேலும் பார்க்க

பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் கலாபாா்வதி ஹோமம்

ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயில் வளாகத்தில் திருமணத் தடை நீங்க சுயம்வர கலாபாா்வதி ஹோமம் நடைபெற்றது. இதையொட்டி கோ பூஜை, பாா்வதி பரமேஸ்வரா், கணபதி கலச பூஜை, கணபதி ஹோமம், சுயம்வர கலாபாா்வதி ஹோமம், மூலவா் ஆ... மேலும் பார்க்க