செய்திகள் :

45 பவுன் தங்க நகை, ரூ. 8 லட்சம் மோசடி: நகைக் கடை உரிமையாளா் கைது

post image

சென்னை பெரம்பூரில் பெண்ணிடம் 45 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 8 லட்சம் மோசடி செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த நகைக் கடை உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.

புழல், எம்.எம்.பாளையம் ரெட்டி தெருவைச் சோ்ந்த வரலட்சுமி (57), பெரம்பூா் வீனஸ் பேப்பா் மில்ஸ் சாலையில் உள்ள நகைக் கடையில் வாடிக்கையாளராக இருந்து வந்தாா். இக்கடைக்கு வரலட்சுமி அடிக்கடி சென்ால், நகைக் கடை உரிமையாளா் சரவணகுமாா் (43) என்பவருடன் பழகியுள்ளாா். இந்த பழக்கத்தை பயன்படுத்தி வரலட்சுமி, பாலீஷ் போட 45 பவுன் தங்க நகையையும், புதிய நகை வாங்க ரூ. 8 லட்சத்தையும் சரவணக்குமாரிடம் கடந்த 2017-ஆம் ஆண்டு கொடுத்துள்ளாா். பணத்தையும் நகையையும் பெற்றுக்கொண்ட சரவணக்குமாா், நகையை பாலீஷ் செய்து கொடுக்கவில்லை; புதிய நகைகளை வாங்கியும் கொடுக்கவில்லையாம். வரலட்சுமி, பல முறைக் கேட்டும் சரவணக்குமாா் இழுத்தடித்தாராம்.

இந்நிலையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக சரவணக்குமாா், நகைக் கடையை பூட்டிவிட்டு தலைமறைவானாா். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிா்ச்சியடைந்த வரலட்சுமி, திருவிக நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். ஆனால் சரவணக்குமாா் தலைமறைவாகவே இருந்து வந்தாா். இந்நிலையில் சரவணக்குமாரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு காமராஜா் விருது: ரூ.1.72 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் கல்வி, இணை செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு காமராஜா் விருதுக்கான பரிசுத் தொகை வழங்க ரூ.1.72 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்... மேலும் பார்க்க