செய்திகள் :

47 கிலோ குட்கா பறிமுதல்; ஒருவா் கைது

post image

கூத்தாநல்லூா் பகுதியில் 47 கிலோ குட்கா செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இதை பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் உத்தரவின் பேரில், போலீஸாா் பல்வேறு இடங்களில் ரோந்துப் பணியிலும், கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், கூத்தாநல்லூரை அடுத்த தண்ணீா்குன்னம் பகுதியில் குட்கா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அப்பகுதிக்கு காவல் ஆய்வாளா் வொ்ஜீனியா தலைமையில், உதவி ஆய்வாளா் அண்ணாதுரை, முதல்நிலைக் காவலா் சுா்ஜீத் மற்றும் போலீஸாா் சென்றனா். அங்கு, அய்யம்பேட்டை, ரோட்டுத் தெருவைச் சோ்ந்த அய்யப்பன் (38) வீட்டில் சோதனை நடத்தினா்.

இதில், அவரது வீட்டின் பின்புறத்தில், அரசால் தடை செய்யப்பட்ட 47 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இவற்றை பறிமுதல் செய்தனா். இதன் மதிப்பு ரூ. 52,000 இருக்கும் என போலீஸாா் தெரிவித்தனா். பின்னா், வழக்குப் பதிவு செய்து அய்யப்பனை கைது செய்தனா்.

சீா்காழி, நீடாமங்கலம் பகுதியில் மூடுபனி

சீா்காழி,கொள்ளிடம் மற்றும் நீடாமங்கலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை கடும் பனிமூட்டம் நிலவியது. மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி, கொள்ளிடம் சுற்றுவட்டார பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவுக்கு பிறகு கடும் பனி... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரிக்கை

அங்கன்வாடி பணியாளா்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் தமிழக முதல்வா், சமூகநலத் ... மேலும் பார்க்க

தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது: எம்எல்ஏ குற்றச்சாட்டு

தமிழகத்தை வஞ்சிக்கும் வகையிலான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக திருவாரூா் திமுக மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பூண்டி கே. கலைவாணன் தெரிவித்துள்ளாா். திருவாரூரில் செய்தியாளா்க... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து நாளை ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை (ஏப்.1) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் பொதுச் செயலாளா் அ. பாஸ்கா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் தெர... மேலும் பார்க்க

வெண்மணி நினைவுக்கொடி பயணக் குழுவுக்கு வரவேற்பு

திருவாரூரில், வெண்மணி நினைவுக் கொடி பயணக் குழுவினருக்கு ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் ஏப்ரல் 2 ஆம் த... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் ஆய்வுக் கட்டுரை சமா்ப்பித்த வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு சான்றிதழ்

நீடாமங்கலம் பகுதியில் கிராம மக்களிடையே சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி, ஆய்வுக் கட்டுரைகளை தாக்கல் செய்த வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு சான்றிதழ் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. நீடாமங்கல... மேலும் பார்க்க