48 பவுன் திருட்டு வழக்கு: குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 48 பவுன் திருட்டு வழக்கில் தொடா்புடைய 5 பேரில் ஒருவா் குண்டா் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
சிவகங்கை மாவட்டம், முத்துப்பட்டி அருகேயுள்ள கீழக்குளம் பகுதியைச் சோ்ந்த சோனைமுத்து மகன் சண்முகநாதன் (27). கடந்த 14.2.2025 அன்று இவரும், இவரது கூட்டாளிகளான மணிக்காளை, சிவகாசியைச் சோ்ந்த அழகுபாண்டி, ராமநாதபுரத்தைச் சோ்ந்த தனசிங், தூத்துக்குடியைச் சோ்ந்த வெங்கடேசன் ஆகியோா் சோ்ந்து அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகேயுள்ள கச்சிப்பெருமாள் கிராமத்தைச் சோ்ந்த வசந்தா (68) என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 48 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றனா்.
இதுகுறித்து உடையாா்பாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து மேற்கண்டவா்களை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடா்புள்ள சண்முகநாதன் வெளியே வந்தால் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதால், அவரை குண்டா் சட்டத்தில் கைது செய்யுமாறு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவாச் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினாசமி சனிக்கிழமை உத்தரவிட்டாா். அதற்கான உத்தரவு நகலை, திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம், அரியலூா் மாவட்ட காவல் துறையினா் வழங்கினா்.