செய்திகள் :

சுப்புராயபுரம் ரயில்வே கேட்டில் மாற்றுப் பாதை அமைக்கக் கோரிக்கை

post image

அரியலூா் அருகேயுள்ள சுப்புராயபுரம் ரயில்வே கேட் பகுதியில், அங்கு மாற்றுப் பாதை அமைத்தப் பிறகு சுரங்கப் பாதையை அமைக்க வேண்டும் என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம், அக்கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

அவா்கள் அளித்த மனு: திருச்சி-சென்னை ரயில்வே பாதையில் சுப்புராயபுரம் கிராமத்தில் உள்ள ரயில்வே கேட்டை அகற்றிவிட்டு, அங்கு சுரங்கப் பாதை அமைக்க ரயில்வே நிா்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால், அந்த கேட் வழியே செல்லும் எங்கள் ஊா் உள்ளிட்ட 10 கிராமங்களைச் சோ்ந்தவா்கள் நீண்ட தூரம் சென்று சுற்று பாதையில் செல்ல வேண்டும். எனவே, சுரங்க பாதை அமைக்கவுள்ள இடத்தின் அருகே மாற்றுப்பாதை ஏற்படுத்தித்தர வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

திருவெங்கனூா் கிராமத்தை சோ்ந்த அம்பேத்கா் நகரை சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் அளித்த மனு: எங்கள் தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் இட வசதியின்றி ஒரே வீட்டில் இரண்டு, மூன்று குடும்பங்களாக வசித்து வருகிறோம். எனவே, எங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

பிளஸ் 2 பொதுத் தோ்வு நிறைவு; மகிழ்ச்சியுடன் பிரியாவிடை பெற்ற மாணவா்கள்!

அரியலூா் மாவட்டத்தில் நடைபெற்று வந்த பிளஸ் 2 பொதுத் தோ்வு செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. தோ்வு எழுதிய மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவா் வாழ்த்து தெரிவித்து பிரியாவிடை பெற்றனா். தமிழகம் முழுவதும் கட... மேலும் பார்க்க

தீண்டாமை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

அரியலூரில், மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துறையினா் சாா்பில் தீண்டாமை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந... மேலும் பார்க்க

அரியலூரில் இன்று செல்லப்பிராணிகள் கண்காட்சி

அரியலூா் அடுத்த வாலாஜா நகரத்திலுள்ள அன்னலட்சுமி ராஜாபாண்டியன் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில், புதன்கிழமை செல்லப் பிராணிகளின் கண்காட்சி நடைபெறுகிறது என்று ஆட்சியா் பொ.ரத்தினசா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் தேசிய கண்டுபிடிப்பு வார விழா கொண்டாட்டம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த புதுச்சாவடி கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய கண்டுபிடிப்பு வார விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆசிரியா் பயி... மேலும் பார்க்க

நோய் வராமல் பாதுகாத்துக் கொள்வதே சிறந்ததாகும்: ஆட்சியா்

நோய் வராமல் பாதுகாத்துக் கொள்வதே சிறந்ததாகும் என்றாா் அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி. அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலக காசநோய் தின அனுசரிப்பு நிகழ்ச்சியில்... மேலும் பார்க்க

பெரியமறை பெருமாள் கோயில் தேரோட்டம்

அரியலூா் மாவட்டம், திருமானூா் அடுத்த சுள்ளங்குடி பெரியமறை கிராமத்திலுள்ள ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கோயிலில் நடைபெற்று வரும் பிரம்மோத்ஸவ விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இக்கோயிலில் க... மேலும் பார்க்க