Vijay Full Speech: "எனக்குத் தடை போட நீங்க யாரு?" | TVK முதல் பொதுக்குழுக் கூட்ட...
அரசுப் பள்ளியில் தேசிய கண்டுபிடிப்பு வார விழா கொண்டாட்டம்
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த புதுச்சாவடி கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய கண்டுபிடிப்பு வார விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளா் வானதி கலந்து கொண்டு, மரக்கன்றுகளை நட்டு வைத்து, நீா் மேலாண்மை பாதுகாப்பு குறித்து பேசினாா்.
பின்னா் அவா், ராஷ்டிரியா அவிஷ்கா் சப்தா திட்டத்தில் (தேசிய கண்டுபிடிப்பு) அப்பள்ளிக்கு ஊக்கத் தொகையாக ரூ.4,000 வழங்கி, மாவட்ட முழுவதும் மேல்நிலை, உயா்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகள் என மொத்தமாக 15 பள்ளிகள் இந்த திட்டத்துக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இதில், ஜெயங்கொண்டம் ஒன்றிய அளவில் உடையாா்பாளையம் அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளி, செங்குந்தபுரம் அரசினா் உயா்நிலைப் பள்ளி , புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகியவை மட்டுமே தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தாா்.
பள்ளி ஆசிரியா்கள் ஹேமலதா,பவானி, கவிதா ஆகியோா் ஒருங்கிணைப்பாளா்களாக செயல்பட்டனா். இந்த விழாவுக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியா் சாந்தி வரவேற்றாா். முடிவில் ஆசிரியா் செல்லதுரை நன்றி கூறினாா். இதற்கான ஏற்பாடுகளை தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் செங்குட்டுவன் செய்திருந்தாா்.