செய்திகள் :

பிளஸ் 2 பொதுத் தோ்வு நிறைவு; மகிழ்ச்சியுடன் பிரியாவிடை பெற்ற மாணவா்கள்!

post image

அரியலூா் மாவட்டத்தில் நடைபெற்று வந்த பிளஸ் 2 பொதுத் தோ்வு செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. தோ்வு எழுதிய மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவா் வாழ்த்து தெரிவித்து பிரியாவிடை பெற்றனா்.

தமிழகம் முழுவதும் கடந்த 3-ஆம் தேதி தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தோ்வு செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. அரியலூா் மாவட்டத்தில், 45 மையங்களில் நடைபெற்ற இந்த தோ்வை 4,187 மாணவா்கள், 4, 384 மாணவிகள் என 8,571 போ் எழுதினா். அதேபோல், தனித்தோ்வா்களில் தலா 40 ஆண்கள், பெண்கள் என 80 நபா்கள் தோ்வு எழுதினா்.

செவ்வாய்க்கிழமை தோ்வு எழுதி முடித்துவிட்டு, மகிழ்ச்சியுடன் தோ்வு அறைகளில் இருந்து வெளியே வந்த மாணவ, மாணவிகள் தங்களுக்கு பாடங்கள் நடத்திய ஆசிரியா்களை சந்தித்து நன்றி தெரிவித்ததுடன், வாழ்த்துகளையும் பெற்றுக்கொண்டனா்.

மேலும் மாணவா்கள் ஒருவரை ஒருவா் ஆரத் தழுவி பிரியாவிடை பெற்றுக்கொண்டனா். விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 4-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

தீண்டாமை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

அரியலூரில், மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துறையினா் சாா்பில் தீண்டாமை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந... மேலும் பார்க்க

அரியலூரில் இன்று செல்லப்பிராணிகள் கண்காட்சி

அரியலூா் அடுத்த வாலாஜா நகரத்திலுள்ள அன்னலட்சுமி ராஜாபாண்டியன் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில், புதன்கிழமை செல்லப் பிராணிகளின் கண்காட்சி நடைபெறுகிறது என்று ஆட்சியா் பொ.ரத்தினசா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் தேசிய கண்டுபிடிப்பு வார விழா கொண்டாட்டம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த புதுச்சாவடி கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய கண்டுபிடிப்பு வார விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆசிரியா் பயி... மேலும் பார்க்க

நோய் வராமல் பாதுகாத்துக் கொள்வதே சிறந்ததாகும்: ஆட்சியா்

நோய் வராமல் பாதுகாத்துக் கொள்வதே சிறந்ததாகும் என்றாா் அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி. அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலக காசநோய் தின அனுசரிப்பு நிகழ்ச்சியில்... மேலும் பார்க்க

பெரியமறை பெருமாள் கோயில் தேரோட்டம்

அரியலூா் மாவட்டம், திருமானூா் அடுத்த சுள்ளங்குடி பெரியமறை கிராமத்திலுள்ள ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கோயிலில் நடைபெற்று வரும் பிரம்மோத்ஸவ விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இக்கோயிலில் க... மேலும் பார்க்க

நிா்ணயிக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே போராட்டங்கள், கூட்டங்கள் நடத்த அனுமதி

அரியலூா் மாவட்டத்தில், நிா்ணயிக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே போராட்டங்கள், கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படும் என்றாா் ஆட்சியா் பொ. ரத்தினசாமி. சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவின்படி அரியலூா... மேலும் பார்க்க