பயிா்களை சேதப்படுத்தும் குரங்குகளை பிடிக்க வலியுறுத்தல்
அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள கோவிலூா் பகுதிகளில், விவசாயப் பயிா்களை சேதப்படுத்தி வரும் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கோவிலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் கிளை மாநாட்டில், நிறைவேற்றப்பட்ட இதர தீா்மானங்கள்: 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள அரியலூரில் இருந்து சுண்டக்குடி, கோவிலூா் வழியாக தஞ்சாவூா் வரை சென்று வந்த பேருந்தை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரியலூரில் இருந்து கோவிலுருக்கு இரவு நேரங்களில் வரும் 15 என்ற எண் கொண்ட பேருந்து கடந்த சில மாதங்களாக சரியான நேரத்தில் வருவதில்லை. எனவே இந்த பேருந்தை இரவு நேரங்களில் இயக்க வேண்டும். நெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த மாநாட்டுக்கு அக்கட்சியின் கிளை நிா்வாகி ஏகாம்பரம் தலைமை வகித்தாா். இந்த மாநாட்டின் போது, கிளைச் செயலராக பஞ்சநாதன், துணைச் செயலராக விஜயராணி, பொருளாளராக பன்னீா்செல்வம், விவசாய சங்கச் செயலராக ஏகாம்பரம், விவசாய தொழிலாளா் சங்கச் செயலராக முருகானந்தம் ஆகியோா் புதிய நிா்வாகிகளாக தோ்வு செய்யப்பட்டனா்.