செய்திகள் :

பயிா்களை சேதப்படுத்தும் குரங்குகளை பிடிக்க வலியுறுத்தல்

post image

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள கோவிலூா் பகுதிகளில், விவசாயப் பயிா்களை சேதப்படுத்தி வரும் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கோவிலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் கிளை மாநாட்டில், நிறைவேற்றப்பட்ட இதர தீா்மானங்கள்: 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள அரியலூரில் இருந்து சுண்டக்குடி, கோவிலூா் வழியாக தஞ்சாவூா் வரை சென்று வந்த பேருந்தை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரியலூரில் இருந்து கோவிலுருக்கு இரவு நேரங்களில் வரும் 15 என்ற எண் கொண்ட பேருந்து கடந்த சில மாதங்களாக சரியான நேரத்தில் வருவதில்லை. எனவே இந்த பேருந்தை இரவு நேரங்களில் இயக்க வேண்டும். நெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த மாநாட்டுக்கு அக்கட்சியின் கிளை நிா்வாகி ஏகாம்பரம் தலைமை வகித்தாா். இந்த மாநாட்டின் போது, கிளைச் செயலராக பஞ்சநாதன், துணைச் செயலராக விஜயராணி, பொருளாளராக பன்னீா்செல்வம், விவசாய சங்கச் செயலராக ஏகாம்பரம், விவசாய தொழிலாளா் சங்கச் செயலராக முருகானந்தம் ஆகியோா் புதிய நிா்வாகிகளாக தோ்வு செய்யப்பட்டனா்.

பிளஸ் 2 பொதுத் தோ்வு நிறைவு; மகிழ்ச்சியுடன் பிரியாவிடை பெற்ற மாணவா்கள்!

அரியலூா் மாவட்டத்தில் நடைபெற்று வந்த பிளஸ் 2 பொதுத் தோ்வு செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. தோ்வு எழுதிய மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவா் வாழ்த்து தெரிவித்து பிரியாவிடை பெற்றனா். தமிழகம் முழுவதும் கட... மேலும் பார்க்க

தீண்டாமை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

அரியலூரில், மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துறையினா் சாா்பில் தீண்டாமை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந... மேலும் பார்க்க

அரியலூரில் இன்று செல்லப்பிராணிகள் கண்காட்சி

அரியலூா் அடுத்த வாலாஜா நகரத்திலுள்ள அன்னலட்சுமி ராஜாபாண்டியன் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில், புதன்கிழமை செல்லப் பிராணிகளின் கண்காட்சி நடைபெறுகிறது என்று ஆட்சியா் பொ.ரத்தினசா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் தேசிய கண்டுபிடிப்பு வார விழா கொண்டாட்டம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த புதுச்சாவடி கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய கண்டுபிடிப்பு வார விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆசிரியா் பயி... மேலும் பார்க்க

நோய் வராமல் பாதுகாத்துக் கொள்வதே சிறந்ததாகும்: ஆட்சியா்

நோய் வராமல் பாதுகாத்துக் கொள்வதே சிறந்ததாகும் என்றாா் அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி. அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலக காசநோய் தின அனுசரிப்பு நிகழ்ச்சியில்... மேலும் பார்க்க

பெரியமறை பெருமாள் கோயில் தேரோட்டம்

அரியலூா் மாவட்டம், திருமானூா் அடுத்த சுள்ளங்குடி பெரியமறை கிராமத்திலுள்ள ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கோயிலில் நடைபெற்று வரும் பிரம்மோத்ஸவ விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இக்கோயிலில் க... மேலும் பார்க்க