செய்திகள் :

DC vs LSG: "அஷுதோஷ் அல்ல இவர்தான் எங்களிடமிருந்து வெற்றியைப் பறித்தார்" - தோல்விக்குப் பின் பன்ட்

post image

ஐபிஎல் தொடரில் நேற்று (மார்ச் 24) நடைபெற்ற டெல்லி vs லக்னோ பரபரப்பான ஆட்டத்தில் கடைசி வரைப் போராடிய லக்னோ அணி இறுதி ஓவரில் டெல்லியிடம் வெற்றியைக் கோட்டைவிட்டது. முதலில் அதிரடியாக பேட்டிங் ஆடி 210 என்ற சவாலான இலக்கை நிர்ணயித்து, பந்துவீச்சில் 9 விக்கெட்டுகள் வீழ்த்திப் போராடிய லக்னோ அணி, டெல்லி வீரர் அஷுதோஷ் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் கடைசி ஓவரில் வெற்றியை நழுவவிட்டது.

ரிஷப் பன்ட்
ரிஷப் பன்ட்

'அவர்தான் ஆட்டத்தை பறித்தார்'

தோல்விக்குப் பிறகு பேசிய லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், ``எங்களின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாடினார்கள். ஒரு அணியாக ஒவ்வொரு ஆட்டத்திலிருந்தும் நேர்மையான விஷயங்களை எடுத்துக்கொண்டு, அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள விரும்புகிறோம். எந்த அளவுக்கு அடிப்படை விஷயங்களைச் செய்கிறோமோ அந்த அளவுக்கு எதிர்காலத்தில் அது நமக்கு சிறப்பானதாக இருக்கும்.

தொடக்கத்திலேயே நாங்கள் விக்கெட்டுகள் எட்டுத்தோம். இருப்பினும், அவர்கள் இரண்டு நல்ல பார்ட்னர்ஷிப்களை அமைத்திருந்தார்கள். ஒன்று ஸ்டப்ஸ் - அஷுதோஷ், மற்றொன்று விப்ராஜ் அஷுதோஷ். விப்ராஜ் நன்றாக விளையாடினார். அவர்தான் ஆட்டத்தை எங்களிடமிருந்து பறித்தார் என்று நினைக்கிறேன்.

விப்ராஜ் நிகம்
விப்ராஜ் நிகம்

இந்தப் போட்டியில் நிறைய அழுத்தத்தை உணர்ந்தோம். ஆனாலும், இப்போட்டியிலிருந்து நிறைய நேர்மையான விஷயங்களை எடுத்துக்கொள்கிறோம். இந்த ஆட்டத்தில் அதிர்ஷ்டமும் ஒரு பங்கு வகித்தது. இதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்த முடியாது என்றாலும், சிறப்பான கிரிக்கெட்டை நீங்கள் விளையாடவேண்டும்." என்று கூறினார்.

டெல்லி அணியில் ஸ்டப்ஸ் விக்கெட்டுக்குப் பிறகு களமிறங்கிய விப்ராஜ், அதிரடியாக 15 பந்துகளில் 2 சிக்ஸ், 5 பவுண்டரி என 39 ரன்கள் அடித்து அஷுதோஷின் வேலையை எளிதாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

Shreyas Iyer : `சாய் சுதர்சனின் விக்கெட்டை எடுத்த ரகசியம் இதுதான்' - ஆட்டநாயகன் ஸ்ரேயாஸ் ஐயர்

பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையேயான போட்டியில் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. பஞ்சாப் அணி சார்பில் டெத் ஓவரில் வைஷாக் விஜயகுமார், மார்கோ யான்சென், அர்ஷ்தீப் குமார் ஆகியோர... மேலும் பார்க்க

GT vs PBKS : தியாகம் செய்த ஸ்ரேயாஸ்; வைசாக்கின் வைட் யார்க்கர் மந்திரம் - பஞ்சாப் வென்றது எப்படி?

பீல்டிங்கைத் தேர்வு செய்த கில்!ஐ.பி.எல் 18வது சீசனின் 5வது போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் தங்கள் முதல் கணக்கைத் தொடங்க அகமதாபாத்தில் பலப்பரீட்சை நடத்தின... மேலும் பார்க்க

Dhoni: "ஆரம்பத்தில் தேவையற்றது என்றே கருதினேன்; ஆனால்..." - Impact Player விதி குறித்து தோனி

IPL தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதிக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் எம்.எஸ்.தோனி. அதிக ரன்கள் வரும் போட்டிகளுக்கு அணியின் மனநிலைதான் முக்கிய காரணம் என்றும் பேசியுள்ளார்.202... மேலும் பார்க்க

IPL: ஆர்ச்சரை இனரீதியாக விமர்சித்த ஹர்பஜன்; வெடித்த சர்ச்சை... சாடும் கிரிக்கெட் ரசிகர்கள்!

ஐபிஎல் 18 வது சீசனின் இரண்டாவது போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே மார்ச் 23-ம் தேதி ஹைதராபாத்தில் மாலை 3.30 மணியளவில் நடைபெற்றது.இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங்... மேலும் பார்க்க

Tamim Iqbal: ஃபீல்டிங்கின்போது நெஞ்சு வலி; மருத்துவமனையில் சொல்வதென்ன?

வங்கதேச கிரிக்கெட் வரலாற்றில் தவிர்க்க முடியாத முன்னாள் வீரர் தமிம் இக்பாலுக்கு நேற்று மைதானத்தில் அவர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது ஹார்ட் அட்டாக் ஏற்பட்ட சம்பவம் கிரிக்கெட் உலகில் அதிர்ச்சி... மேலும் பார்க்க