செய்திகள் :

5 ஆண்டுகளில் 667 புலிகள் இறப்பு - மகாராஷ்டிரத்தில் அதிகம்

post image

நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 667 புலிகள் உயிரிழந்துள்ளன; 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட இறப்புகள், காப்பகங்களுக்கு வெளியே நிகழ்ந்துள்ளன.

இதில் மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக இறப்புகள் நேரிட்டுள்ளன என்று அரசுத் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாடு துறையின்கீழ் செயல்படும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய (என்டிசிஏ) தரவுகளின்படி, நாட்டில் கணக்கிடப்பட்ட மொத்த புலிகளின் எண்ணிக்கை 3,682. இதில் 30 சதவீத புலிகள், பாதுகாக்கப்பட்ட காப்பகங்களுக்கு வெளியே வாழ்கின்றன.

கடந்த 2021-ஆம் ஆண்டுமுதல் இதுவரை உயிரிழந்த புலிகளின் எண்ணிக்கை 667 ஆகும். இதில் 51 சதவீத இறப்புகள் (341 புலிகள்) காப்பகங்களுக்கு வெளியே நிகழ்ந்துள்ளன.

காப்பகங்களுக்கு வெளியே மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 111 புலிகளும், மத்திய பிரதேசத்தில் 90 புலிகளும், கேரளத்தில் 28 புலிகளும் உயிரிழந்துள்ளன. தெலங்கானா, உத்தரகண்ட், கா்நாடகம் ஆகிய மாநிலங்களிலும் காப்பகங்களுக்கு வெளியே புலிகளின் இறப்பு பதிவாகியுள்ளது. கடந்த 2012 முதல் 2024 வரை உயிரிழந்த புலிகளின் மொத்த எண்ணிக்கை 1,519 என்று என்டிசிஏ தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கடைசியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, மத்திய பிரதேசத்தில் அதிகபட்சமாக 785, கா்நாடகத்தில் 563, உத்தரகண்டில் 560, மகாராஷ்டிரத்தில் 444, தமிழகத்தில் 306, அஸ்ஸாமில் 229, கேரளத்தில் 213, உத்தர பிரதேசத்தில் 205 புலிகள் உள்ளன.

புலிகள் உயிரிழப்பு

ஆண்டு மொத்த எண்ணிக்கை காப்பகங்களுக்கு வெளியே

2021 129 64

2022 122 52

2023 182 100

2024 126 65

2025 (இதுவரை) 108 60

பெட்டிச் செய்தி...2

விரைவில் புதிய திட்டம்

மனிதா்கள்-புலிகள் இடையிலான மோதல் அதிகரிப்பால், பாதுகாக்கப்பட்ட காப்பகங்களுக்கு வெளியே புலிகளின் இறப்பு அதிகரித்து வருகிறது. இப்பிரச்னைக்கு தீா்வுகாணும் நோக்கில், காப்பகங்களுக்கு வெளியே புலிகள் பாதுகாப்புக்கான திட்டத்தை (டிஓடிஆா்) அரசு விரைவில் தொடங்கவுள்ளது. இத்திட்டம், 17 மாநிலங்களில் 80 வனப் பிரிவுகளை உள்ளடக்கியதாகும்.

சைபர் மோசடியால் ரூ. 1.2 லட்சம் கோடியை இந்தியர்கள் இழப்பார்களா? நீங்களும் ஜாக்கிரதையாக இருங்கள்!

கடந்தாண்டில் மட்டும் சைபர் குற்றங்கள் மற்றும் மோசடிகளால் இந்தியர்களிடம் ரூ. 22,842 கொள்ளையடிக்கப்பட்டதாக தில்லி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.சைபர் குற்றங்கள் மற்றும் மோசடி சம்பவங்கள் நாள்தோறும் நடந்... மேலும் பார்க்க

ராகுல் காந்தி கூறியது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்: தேர்தல் ஆணையம் பதில்

வாக்குகள் திருடப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலமாக பல லட்சம் வாக்காளர்களை, வாக்காள... மேலும் பார்க்க

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

மாலேகான் குண்டுவெடிப்புக்குப் பிறகு காங்கிரஸ் இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயன்றதாகவும், ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவா நிர்வாகிகள் திட்டமிட்ட முறையில் குறிவைக்கப்பட்டதாகவும் மகாராஷ்டிர முதல... மேலும் பார்க்க

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பதிவு அஞ்சல் முறை, விரைவு அஞ்சலுடன் இணைக்கப்படுவதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை செப்.1 முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.இந்திய அஞ்சல் சேவையின் செயல்பாட்டுக் கட்டணம் மற்றும் வி... மேலும் பார்க்க

சுதந்திர தின உரைக்கான யோசனைகளைப் பகிருங்கள்! - பிரதமர் மோடி அழைப்பு

சுதந்திர தின விழா வருவதையொட்டி, பிரதமரின் உரையில் இடம்பெற வேண்டிய விஷயங்கள் குறித்த யோசனைகளைப் பகிருமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி 79-வது ஆண்டு ச... மேலும் பார்க்க

வாக்குகளைத் தேர்தல் ஆணையம் திருடுவது தேசத்துரோகம்; 100% ஆதாரங்கள் உள்ளன! - ராகுல்

மக்களின் வாக்குகளை தேர்தல் ஆணையம் திருடுகிறது என்பதற்கான 100% ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலமாக ப... மேலும் பார்க்க