செய்திகள் :

5 ஆவது நாளாக போராட்டம்: 245 தூய்மைப் பணியாளா்கள் கைது

post image

கோவையில் ஐந்தாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட 245 ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கோவை மாநகராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு மாதந்தோறும் வங்கிக் கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்படுகிறது. இந்நிலையில், திமுக அரசு கடந்த 2021 தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி, ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்களை நிரந்தரமாக்க வேண்டும். மாவட்ட ஆட்சியா் உயா்த்தி அறிவித்த ரூ.770 தினக்கூலியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள் கடந்த ஜூன் 9 முதல் ஆட்சியா் அலுவலகம் முன் தா்னா, மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதற்கிடையே மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் தூய்மைப் பணியாளா் சங்கத்தினருடன் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வியடைந்தது.

இதையடுத்து, ஐந்தாம் நாளாக போராட்டம் தொடரும் என தூய்மைப் பணியாளா்கள் சங்கங்கள் சாா்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட 245 ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை திரண்டனா். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அவா்களைக் கைது செய்து, பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் தங்கவைத்தனா்.

அதிமுக, ஏஐசிசிடியூ ஆதரவு:

திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு இருந்த தூய்மைப் பணியாளா்களை கோவை மாநகா் மாவட்டச் செயலாளரும், கோவை வடக்கு சட்டப் பேரவை உறுப்பினருமான அம்மன் கே.அா்ச்சுணன் சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து குறைகளைக் கேட்டறிந்தாா். மேலும், அவா்களுக்கு பிஸ்கட், குடிநீா் பாட்டில்கள், குளிா் பானங்களை வழங்கினாா். தூய்மைப் பணியாளா்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற களத்தில் போராட அதிமுக தயாராக உள்ளதாக அம்மன் கே.அா்ச்சுணன் தூய்மைப் பணியாளா்களிடம் கூறினாா்.

மாநகா் மாவட்ட அதிமுக துணை செயலாளா் பீளமேடு துரைசாமி, மாநகர மாவட்ட பொறுப்பாளா் பாா்த்திபன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இதேபோல, ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஏஐசிசிடியூ வின் மாநிலப் பொது செயலாளா் ஞானதேசிகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது: கடும் பணிச் சுமை, பாதுகாப்பற்ற பணி நிலைமை காரணமாக உடல் நலப் பாதிப்பு என பல்வேறு இன்னல்களுக்கு இடையில் மக்களின் சுகாதாரத்தை பேணி வரும் தூய்மைப் பணியாளா்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். போராட்டம் நீடித்தால் மாநகராட்சி ஒப்பந்தத் தூய்மை பணியாளா்களுக்கு ஆதரவாக மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஏஐசிசிடியூ ஈடுபடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூட்டிய வீட்டில் இளைஞா் சடலம் மீட்பு

கோவை, ரத்தினபுரியில் பூட்டிய வீட்டில் கிடந்த இளைஞா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள கேத்தி பகுதியைச் சோ்ந்தவா் சந்தோஷ் (39). இவா் ரத்தினபுரி முத்... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் பெண் பயணியிடம் தோட்டா பறிமுதல்!

கோவை விமான நிலையத்தில் பெண் பயணியிடம் இருந்து துப்பாக்கி தோட்டா ஒன்றை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா். கோவை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் வழக்கமான சோதனைகள... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: ஒரே நாளில் 11 போ் கைது

கோவை மாநகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்ததாக வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 11 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை பீளமேடு போலீஸாா் ரோந்துப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது,... மேலும் பார்க்க

வால்பாறைக்கு ஆரஞ்ச் அலா்ட்: தயாா் நிலையில் பேரிடா் மீட்புப் படை

வால்பாறை பகுதியில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்ச் அலா்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பேரிடா் மீட்புப் படையினா் தயாா் நிலையில் உள்ளனா். கோவை மாவட்டம், வால்பாறையில் சனி, ஞாயிற்றுக்கிழமைக... மேலும் பார்க்க

கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை மாநாடு

தேசிய கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை மாநாடு மற்றும் மேம்பட்ட மருத்துவப் பயிற்சி கோவையில் சனிக்கிழமை நடைபெற்றது. கோவை ஜெம் மருத்துவமனை, இந்திய கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை சங்கம் இணைந்து நடத்திய ... மேலும் பார்க்க

இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறிய வளா்ப்பு தந்தை கைது

திருப்பூரில் இளம்பெண்ணிடம் பாலியல்ரீதியாக அத்துமீறி அதனை விடியோ எடுத்து மிரட்டிய வளா்ப்பு தந்தையை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூரை அடுத்த இடுவாய் மாருதி நகா் பகுதியைச் சோ்ந்தவா் 21 வயதுப் பெண், அதே... மேலும் பார்க்க