செய்திகள் :

5 ரயில்களின் நேரம் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

post image

தெற்கு ரயில்வேயில் முக்கிய 5 ரயில்கள் குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் நின்று, புறப்படும் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரியில் இருந்து புதன்கிழமைதோறும் இரவு 11.25 மணிக்கு தாதா் செல்லும் சாலுக்கியா விரைவு ரயில் (எண்: 11006) காட்பாடி நிலையத்துக்கு நள்ளிரவு 1.20 மணிக்கு வந்து 1.40 மணிக்கு புறப்படும். தற்போது, இந்த ரயில் நள்ளிரவு 1.05 மணிக்கு வந்து 1.25 மணிக்குப் புறப்படும்.

அதேபோல, சென்னை எழும்பூரிலிருந்து மாலை 3.40 மணிக்கு புறப்படும் பல்லவன்அதிவிரைவு ரயில் (எண்: 66055) மேல்மருவத்தூா் நிலையத்துக்கு மாலை 5.08 மணிக்கு வந்து, 5.10 மணிக்கு புறப்படும். தற்போது, மாலை 4.05 மணிக்கு வந்து, மாலை 5 மணிக்கு இந்த ரயில் புறப்படும்.

தாம்பரம் - விழுப்புரம் புறநகா் மின்சார பயணிகள் ரயில் (எண்: 66055) செங்கல்பட்டு ரயில் நிலையத்துக்கு மாலை 6.48 மணிக்கு வந்து மாலை 6.50 மணிக்குப் புறப்பட்டுச் சென்ற்குப் பதிலாக, மாலை 6.58 மணிக்கு வந்து இரவு 7 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்.

கொல்லம் - தாம்பரம் விரைவு ரயில் (எண்: 16102) செங்கல்பட்டுக்கு நள்ளிரவு 1.50 மணிக்கு வந்து அதிகாலை 2 மணிக்குப் புறப்பட்டுச் செல்வதற்குப் பதிலாக நள்ளிரவு 1.43 மணிக்கு வந்து, 1.45 மணிக்குப் புறட்டுச் செல்லும்.

மங்களூரு சென்ட்ரல் - தாம்பரம் விரைவு ரயில் (எண்: 16160) செங்கல்பட்டுக்கு அதிகாலை 2.08 மணிக்கு வந்து, 2.10 மணிக்கு புறப்பட்டுச் செல்வதற்கு பதிலாக, நள்ளிரவு 1.53 மணிக்கு வந்து 1.55 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக - பாஜக கூட்டணி ஒரு சதித்திட்டம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

அதிமுக - பாஜக கூட்டணி, தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கும் சதித்திட்டம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "நமது திமுக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி... மேலும் பார்க்க

நவீன் மரணம் தற்கொலை போன்றே உள்ளது: காவல் ஆணையர் அருண்

சென்னை: தனியார் பால் நிறுவன மேலாளர் நவீன் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்திருக்கும் நிலையில், அது தற்கொலை போன்றே உள்ளது என்று காவல் ஆணையர் அருண் விளக்கம் கொடுத்திருக்கிறார்.சென்னையை அடுத்த புழல் ப... மேலும் பார்க்க

கூட்டணி விவகாரத்தில் அமித் ஷா சொல்வதே இறுதி முடிவு: எல். முருகன்

கூட்டணி விவகாரத்தில் அமித் ஷா சொல்வதே இறுதி முடிவு என மத்திய இணையமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ளதையடுத்து அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் இணைந்த... மேலும் பார்க்க

அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்: அமித் ஷாவின் கருத்துக்கு இபிஎஸ் பதில்!

கூட்டணி ஆட்சி என மத்திய அமைச்சர் அமித் ஷா கூறிய நிலையில், தமிழ்நாட்டில் அதிமுக பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சியமைக்கும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 'தி நியூ இந்தியன் எ... மேலும் பார்க்க

பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: தவெக திட்டவட்டம்

தவெகவுடன் கூட்டணிக்கு முயற்சிப்போம் என அமைச்சர் அமித் ஷா கூறிய நிலையில், பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என தவெக தலைமை கூறியுள்ளது. 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கு அளித்த நேர்காணலில், தவெக... மேலும் பார்க்க

கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம்!

கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் ஜூலை 8 ஆம் தேதி ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத... மேலும் பார்க்க