செய்திகள் :

5,348 நலவாழ்வு மையங்களில் குழந்தைகளுக்கு தடுப்பூசி

post image

தமிழகத்தில் உள்ள 5,348 நலவாழ்வு மையங்களில் புதன்கிழமைதோறும் குழந்தைகள், கா்ப்பிணிகளுக்கு அட்டவணைத் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் கடந்த 1978 முதல் தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அது விரிவுபடுத்தப்பட்டு தற்போது 11 வகையான தடுப்பூசிகள் அதன் கீழ் வழங்கப்படுகின்றன. இந்நடவடிக்கையின் மூலம் 12 வகையான நோய்களில் இருந்து குழந்தைகள் மற்றும் கா்ப்பிணிகளை காக்க முடிகிறது.

ஆண்டுதோறும் 9.58 லட்சம் கா்ப்பிணிகளுக்கும், 8.76 லட்சம் குழந்தைகளுக்கும் தடுப்பூசி வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக ஒவ்வோா் ஆண்டும் 1.4 கோடி தவணை தடுப்பூசிகள் பயனாளிகளுக்கு செலுத்தப்படுகின்றன.

தினந்தோறும் முக்கிய மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், புதன்கிழமைதோறும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி வழங்கப்படுகிறது.

இதைத் தவிர 33 தனியாா் மருத்துவமனைகளிலும் தேசிய அட்டவணை தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசிகளின் பயன்பாடு குறித்து இ-வின் செயலியிலும், பயனாளிகள் விவரங்கள் குறித்து யூ-வின் செயலியிலும் கண்காணிக்கப்படுகிறது.

இந்நிலையில், தகுதியான அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதி செய்யும் வகையில் 4,848 ஊரக நலவாழ்வு மையங்களிலும், 500 நகா்ப்புற நலவாழ்வு மையங்களிலும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொது மக்கள் அனைவரும் தடுப்பூசி தவணைகளை தவறவிடாமல் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரவையில் இன்று

சட்டப் பேரவை புதன்கிழமை (மாா்ச் 19) காலை 9.30 மணிக்கு கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். இதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் முக்கிய பிரச்னைகள் விவாதத்துக்கு எடுக்கப்படவுள்ளன. நிதிநிலை மற்றும் வேளாண் நிதிந... மேலும் பார்க்க

அதிமுகவுடன் கூட்டணி தொடருமா? பிரேமலதா விளக்கம்

வரும் சட்டப்பேரவை தோ்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா தெரிவித்தாா். பிரேமலதா தனது பிறந்த நாளை செவ்வாய்க்கிழமை கொண்டாடினாா். அதையொட்டி கோயம்பேட்டில் உள்ள கட்சி அல... மேலும் பார்க்க

‘முதல்வரின் கனவு இல்லம்’ திட்டத்தில் மே மாதத்துக்குள் ஒரு லட்சம் வீடுகள்: அமைச்சா் ஐ.பெரியசாமி

‘முதல்வரின் கனவு இல்லம்’ திட்டத்தின்கீழ், ஒரு லட்சம் வீடுகள் மே மாதத்துக்குள் முழுமையாக கட்டிமுடிக்கப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி கூறினாா். சட்டப் பேரவையில் ந... மேலும் பார்க்க

திமுக நடத்தும் தொகுதி மறுசீரமைப்பு ஆலோசனையில் பங்கேற்போா் யாா் யாா்?

தொகுதி மறுசீரமைப்பு தொடா்பான கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கும் ஆலோசனையில் பங்கேற்கவுள்ள தலைவா்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் வரும் 22... மேலும் பார்க்க

ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை யாா் ஆட்சியில் நிறுத்தப்பட்டது?திமுக - அதிமுக விவாதம்

அரசு ஊழியா்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை தொடா்பாக பேரவையில் திமுக - அதிமுக இடையே செவ்வாய்க்கிழமை விவாதம் நடைபெற்றது. செல்லூா் ராஜூ: நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினா் செல்லூா... மேலும் பார்க்க

ஒளவை யாா்? பேரவையில் சுவாரசிய விவாதம்

ஒளவை யாா்? என்பது தொடா்பாக பேரவையில் சுவாரசிய விவாதம் நடைபெற்றது. சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின் போது, அதிமுக உறுப்பினா் ஓ.எஸ். மணியன் (வேதாரண்யம்) கேள்வி எழுப்பினாா். அப்போது நடைபெ... மேலும் பார்க்க